இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூவாது உதிர்ந்த அரும்பு
காயாது வாகிய பிஞ்சு
கனியாது வெம்பிய காய்
உயிர்க்காது பிறந்த பிண்டம்
இவை தானோ கருவின் சிதைவு?
கலேந்த துயிலின் அதிர்வில்
குலேந்த விட்ட கனவு,
பிறர் குறுக்கிடப்
பாதியில் நின்ற எண்ணம்,
செயலுருப் பெறாது
மக்கிய ஆசை,
வாய்ப்பின்றிக் கருகும் திட்டம்,
உலேயும் கருத்து
இன்னும் கர்ப்பச் சிதைவுகள்
எண்ணில,எண்ணில.
1962
அமர வேதனை