பக்கம்:அமிர்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கரன், மேஜைமீது ஸ்டாண்டிட்டு வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தான். ஒரு கணம் மலைத்து நின்றான். மாலைகள் புடைசூழக் காட்சியளித்தது அவன் போட்டோ. அவன் விழிகள் கலங்கின.

  “சரளா, உனக்கு சுந்தரம் உறவா?“ 
  “ஆமாம்; சொல்லலா மென்றிருந்தேன். அத்தான் வேண்டும். அவருக்குக் கல்யாணம். லெட்டர் எழுதிவைத்திருக்கிறேன், போஸ்ட் செய்ய.”
“சரளா, ஒரு ஆச்சரியம் பார்த்தாயா? மணமகனிடமிருந்து உனக்கும், மணமகளிடமிருந்து எனக்கும் அழைப்புகள் வந்திருக்கின்றன. சுந்தரி என் அத்தை பெண். நீ கல்யாணத்துக்குப் போய் வா.”
“உங்கள் இன்பச் சூழ்நிலையை விட்டு நான் எங்கும் போகவில்லை.”
“அப்படி யென்றால் தம்பதிகட்கு நம் இருவர் சார்பிலும் நல்ல பரிசாக நாளை அனுப்பி விடுவோமா?”
“ஏன், நீங்கள் போகவில்லையா?” 
“ஊஹஅம்; என் இதய ராணியை விட்டு எனக்கு அங்கு என்ன வேலை? சரளா, ஒரு விண்ணப்பம். உன் அத்தானுக்கு எழுதி வைத்திருக்கிருயல்லவா அந்தக் கடிதத்தை அனுப்பவேண்டாம். பாவம், அவர் வருந்துவார்.”

. ’ஏன்’ என்ற கேள்விக்குறி அவளது நெற்றியில் வளே விட்டது. ஆனால் கேட்கவில்லை; ’சரி’ என்ற பாவனையில் இருந்தாள். -

மேஜை மீதிருந்த பால் பாத்திரத்தைப் பார்த்ததும், “சரளா, பால் அப்படியே இருக்கிறதே, இன்னும் சாப்பிடவில்லையா?” என்று கேட்டு, பாலைக் கூர்ந்து நோக்கினன். எனே அடுத்த நிமிஷம் அவன் திகைப்பூண்டை மிதித்தவனுகத் திகைத்து நின்றான். பாலின் நிறம் மாறியிருந்தது. இதில் ஏதோ சூது இருக்கிறதென முடிவிட்டான் அவன்.

“சரளா, பால் உனக்கு வேண்டாமா ? நான் சாப்பிடட்டுமா?”15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/17&oldid=1192817" இலிருந்து மீள்விக்கப்பட்டது