பக்கம்:அமிர்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேன். ஜன்னல் வழியே லெட்டர் ஒன்று வந்து விழுந்தது. லதாதான் எழுதியிருக்கின்றாள் என்பதை ஊகித்ததும் அவசரமாகப் பிரித்தேன்.

அன்புள்ள அத்தான்,

தாங்கள் என்னிடமிருந்து இத்தகைய லிகிதத்தை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

என் இதய பீடத்தில் வைத்துப் பூஜிக்கும் தங்களை வேறொரு ஜீவனும் அந்தரங்க பிரேமையுடன் அர்ச்சிக்கிற ரகசியத்தை இன்றுதான் நான் அறிந்துகொள்ள வாய்ப்பு கிட்டியது. நான் தங்களுக்கு முறைப்பெண் என்று அவளுக்கு எவ்விதம் தெரியும்?

சுஜாதாவின் பழக்கம் ஏற்பட்ட நான்காம் நாள் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெட்டியைத் திறந்து காண்பித்தாள்.அப்போது ரோஜா மலர்கள் புடை சூழ அவற்றின் பரிமன வாசனயிடையே திளைத்து வீற்றிருந்தீர்கள் தாங்கள். ஆமாம்: தங்கள் போட்டோவைத்தான் குறிப்பிடுகிறேன். என் உடல் வியர்க்க, நல்ல வேளையாக நிலையைச் சமாளித்துக்கொண்டு மெல்ல நகர்ந்து விட்டேன்.

என்னினும் அவள் எவ்விதத்திலும் தங்களுக்கு ஏற்றவள். அவளுடன் பழகியது குறுகிய காலமெனினும் தங்களிடம் முழு நம்பிக்கையையும் வைத்துளாள் சுஜாதா.

சுஜாதாவை தங்கள் உயிர்த்துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்த அபலையின் ஒரே வேண்டுகோள். அதுவேதான் என் அத்யந்த ஆசை.

இங்ஙனம்
தங்களவளாயிருந்த
லதா.

உள்ளம் உருகியது. உடல் உருகினேன். நரக வேதனை என்னுள் சுயாட்சி செலுத்த, நான் செயலிழந்தேன்; செய்வதறியாமல் சித்தம் குலைந்தேன்.

திடுமெனக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுஜாதா ஓடோடி வந்தாள். என்ன ஆச்சர்யம்! கனவில் நிகழ்வது போலிருந்தது. என்னவோ எதோ என்று பதறிப் போனேன்.

“லதாவின். உடல் நிலை ரெம்பவும் கவலைக்கிடமா யிருக்கிறது. ‘மாரடைப்பு’ ஏற்பட்டுவிட்டது. இப்போது தான் இங்கே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்திருக்கிறேன். புறப்படுங்கள்” என்றாள் துயரம் ததும்ப.

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/64&oldid=1319076" இலிருந்து மீள்விக்கப்பட்டது