பக்கம்:அமிழ்தின் ஊற்று (கவிதை).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதமா இனத்தில் இன்பம்
மாமழை பொழிந்து வாழ்வில்
இனிதான செல்வ மெல்லாம்
இசைததமிழ எனவ ளர்த்துப்
புனிதமா ஞானப் பைங்கூழ்
புதையாது காட்டும் அன்பே!
தனித்தொளிர் காதற் பாட்டின்
தண்மனப் பெட்ட கம்!

வாழ்கநீ இரண்டு ளத்தேன்
வார்த்திடும வாழ்க்கைப் பாட்டே!
வாழ்கநீ மனிதர்க் கிங்கு
மகிழ்தருஉம் அமுத வானே !
வாழ்கநீ உலகிற் இங்கோர்!
உறுதியை வழங்கும் பாலே!
வாழ்கநீ குடும்பங் காண
வளர்ந்திடும் குலவிளக்கே!