பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 149 (பாட்டு-66) ராக மாலிகை i. ராகம்-செஞ்சுருட்டி - தாளம்-ஆதி (திஸ்ரநடை) - (எடுப்பு) பாரதியெனும் பாவலன் புகழ் பாடுவோம்-சுப்ரமண்ய பாரதியெனும் பாவலன் புகழ் பாடுவோம்-தமிழ்ப்பாட்டினல் நாட்டினர்க் கேட்டினை ஒட்டிட வழி காட்டியக் கவி= . . . -(பாரதி) (தொடுப்பு) - * ஆரமுதிணைக் கவிதைகள் ஆயிரம் ஆயிரம் புனைந்தே கார்முகிலெனப் பொழிந்தே மக்கள் - கவலையெல்லாம் களைந்திடுங் கவி- -(பாரதி) 2. நாதநாமக்கிரியை - -: * ~ * (முடிப்பு 1 - - - - - வறுமை நீங்கிச் செழுமை யோங்கப் பாடினன்-மக்கள் வாழ்வில் ஏற்றத் தாழ்வு நீங்கப் பாடினன்-மனித உரிமைவேட்கை எங்கும் மூளப்பாடினன்-நாட்டிற் (கு) ஊறுசெய்யும் சக்தியாவும் சீறிமாளச் சாடினன் - -(பாரதி) - 2 \அறிவு ஓங்கி வையம் தழைக்கப் பாடினன்-உலகில் ஆணும் பெண்ணும் ஓர் நிகரெனப் பாடினன்-அடிமைச் சிறுமை வாழ்வுச் சிதைவுறுமெனப் பாடினன்-நாட்டின் திறமை மேவும் தொழில் வளங்கள் பெருகவென்று பாடினன்க - -(பாரதி) 3 விடுதலையெனும் பேரொலி முழக்கினன்-ஜாதி வேற்றுமை ஒழிந்திடப் பழக்கினன்-சூழும் இடர்கள் யாவும் பொடிபடக் கலக்கின்ை-தமிழன் ஏற்றமோடு ஆற்றல்கண்டுப் போற்றியே விளக்கின்ை =(பாரதி)