இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூவை எஸ். ஆறுமுகம் 117 __________________________________
“ஆத்தா!... உங்களை நான் சாகவிடவே மாட்டேன். நீங்க என்னை அனாதையா விட்டது பெரிய தப்பு தான். இருந்தாலும், பத்து மாசம் சுமந்து பெத்தெடுத்த தாயாச்சே நீங்க!... உங்களைத் தான் நிதமும் கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டு வா ரேன். முத்துமாரி அம்மா, நீ தான் இனி எங்களுக்குத் துணை. இம்பிட்டு நாளைக்கப்பாலே ஆத்தாளும் மகனுமான எங்க ரெண்டு பேரையும் மட்டும் பிரிச்சுப் பிடாதே!... ***