பூவை எஸ். ஆறுமுகம்
187
புகைப்படம் இருந்தது. தேதி-30 ஜனவரி, 1953. பெண் மனத்துக்கும் ஆண் மனத்துக்கும் மூன்று முடிச்சுகள் போட்டுக் கொண்ட புனித வேளை நினைவில் ஒடியது. யாரோ ஒரு த்தியாக மனை புகுந்து, தன் உரிமையாக மனம் புகுந்த மனை விளக்கை அவன் போற்றாத வேளை யுண்டா? புக ழாத போது எண் டா? - சக்தியுள் சிவ மாகி, சிவத்துள் சக்தியாகி விட்டவர்கள்!
வாழ்க்கை புதிராகத் தான் இருந்தது. ஆனால், அவன் வரை வாணி புதிராக அமையவில்லை. பெண் புதிராம், புதிர்! பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாதவன் உளறிக் கொட்டிய பொய்-பச்சைப் பொய் இது! அப்படி யென்றால், அன்றைக்கு, அவன் தாராவைக் காரில் கொண் டுபோய் விட்டுத் திரும்பு கையில், காரினின்றும் அவன் துணைவி வாணி இறங்கி வந்தாளே...?
அந்த ஒரு நான் - ‘வாணி.”
"......"
கோபமா, வாணி!”
“ஊஹூம்’
‘பார்த்தியா, ஏன் கோபப்படனும்னு ஒரு வார்த்தை கேட்கக் காணமே?”
"ஏனாம்?”
“தாராவைக் காரில் கொண்டு விட்டு தாமத ஆமாக வந்தது க்கு...?’’
“அதிலே தவறில்லையே?’’