பக்கம்:அமுதவல்லி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 3r

“அன்பான அமுதா!

உன் படத்தை மட்டுமே நான் திருடிச் செல்கிறேன். என் தப்புக்காக என்னை மன்னித் துவிட உனக்கு உரிமையுண்டு.

இப்படிக்கு, ராஜபார்ட் மாரியப்பன்.”

“ஆத்தா எனக்குப் புருஷனைத் தேடிக்கிட்டேன்! நாளைக்கே உன் இஷ்டம் போலவே என்னை மாலையும் கழுத்துமாப் பார்க்கலாம் ஆத்தா!” என்று சிரிக்கச் சிரிக்கப் பேசினாள் அமுதவல்லி.

மார்புறத் தழுவிய அமுதவல்லியுடன் மாரியப்பன் நஞ்சுண்டு வீட்டு முகப்பில் சுருண்டு கிடந்த உண்மை நிலையை அவள் எப்படி அறிவாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/39&oldid=1375362" இலிருந்து மீள்விக்கப்பட்டது