பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 அம்பிகாபதி காதல் காப்பியம்


எண்குணம் இயைந்த ஏந்தலே போற்றி
எங்கும் மிளிர்ந்தே இருப்போய் போற்றி

25 எல்லாம் செய்ய வல்லோய் போற்றி
யாதும் அறிந்த எந்தாய் போற்றி
தன்வயம் உடைய தகையோய் போற்றி
தூய்மை நிறைந்த தொல்லோய் போற்றி
இயற்கை உணர்வுடை எம்பிரான் போற்றி

30 முற்றும் உணர்ந்த முதல்வா போற்றி
இயல்பாய்க் கட்டுகள் இரிந்தோய் போற்றி
பேரரு ளுடைய பெரியோய் போற்றி
முடிவில் ஆற்றல் உடையோய் போற்றி
வரம்பில் இன்பம் வாய்த்தோய் போற்றி

35 உயர்வற உயர்நலம் உடையோய் போற்றி
மயர்வற மதிநலம் அருள்வோய் போற்றி
பிறப்பினை அறுத்திடும் பெரியோய் போற்றி
ஆராத இன்பம் அருள்வோய் போற்றி
எண்ணிறந் தெல்லை யிலாதோய் போற்றி

40 இல்லா இடமே இல்லோய் போற்றி
தாயிற் சிறந்த தன்மையோய் வணக்கம்
மாசற்ற ஒளியாய் மலர்ந்தோய் வணக்கம்
அன்பருக் கன்பனாய் அருளுவோய் வணக்கம்
நோக்கரிய நுண்ணிய பொருளே வணக்கம்

45 போக்கும் வரவும் இலாதோய் வணக்கம்
அன்னையிற் சிறந்த அமிழ்தமே வணக்கம்
அனைத்து நுகர்வாயும் அமைந்தோய் வணக்கம்
பல்லுயி ரெல்லாம் பயின்றோய் வணக்கம்
வல்லிருள் ஓட்ட வல்லோய் வணக்கம்

50 அன்பு வலையில் அகப்படுவோய் வணக்கம்


24. மிளிர்ந்து - ஒளி வீசி. 31.கட்டுகள் - பாசங்கள்; இரிந்தோய் - நீங்கினவனே. 34. வரம்பு இல் - அளவில்லாத. 35. உயர்வு அற - தன்னினும் உயர்வு இல்லாதபடி. 36. மயர்வு - மயக்கம். 49. வல்விருள் - அறியாமை, அஞ்ஞானம்.