பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வெர்னர் : ( நாற்காலியில்அமர்ந்து) என்ன ருடென்ஸ் ஆடை அலங்காரங்களோடு வெளியே கிளம்பிவிட்டாய் போலிருக் கிறதே! அல்டார்புக்கா போகிருய்? டென்ஸ் : மாம், மாமா! க நேரமாகிவிட்டது ! ரு رائے| Д5 து வெர்னர் : வாலிப வயது . இந்தக் கிழட்டு மாமாவிடம் இருந்து பேசக்கூட நேரமில்லை உனக்கு! ருடென்ஸ் : உங்களுக்கும் நான் அவசியமில்லாமற் போய் விட்டது! இங்கே ஒரு மாற்ருனைப் போலத்தானே நானும் இருக்கிறேன் ! வெர்னர் : (அவனே நிதானமாகப் பார்த்து) உண்மைதான், முற்றிலும் உண்மைதான்! நீ அவ்வளவுக்கு மாறியிருக் கிருய் நேரத்திற்கு நேரம் பட்டுச்சட்டைதான்! தொப்பி யிலே மயில் இறகு! குடியானவர்களைக் கண்டால் உனக்கு இழிவாகப் படுகிறது. அவர்கள்_உள்ளன்போடு கும்பிட் ட்ாலும், நீ பதிலுக்கு வணங்குவதில்லை ! ருடென்ஸ் : அவர்களுக்கு அளிக்கவேண்டிய மரியாதையைத் தான் நான் அளிக்கிறேன். அவர்கள் உரிமை வேறு கொண்டாடுவதையே நான் எதிர்க்கிறேன். வெர்னர் : நாடு முழுவதும் ஸ்திரிய அரசரின் கொடு மைகள் தாங்காமல் கொந்தளிக்கிறது. மக்களுடைய துக் கத்திலும் துயரத்திலும் நீ மட்டும் பங்கு கொள்வதில்லை. அது மட்டுமல்ல-நீ அந்த அந்நியர்களுடனே கூடிக் குல்ாவுகின்ருய். அடிமையான இந்த சுவிஸ் நாட்டின் இழி நிலையை எண்ணிப் பாராமல், எதிரிகள் அளிக்கும் கானல் நீர் போன்ற இன்பங்களில் மோகம் கொண்டிருக்கிருய். உன்னைப் பெற்ற நாடு புலம்பித் தவிக்கிறது; :: கொடுங்கோலரின் அடிவருடியாக இருக்கி : ருடென்ஸ் : நாடு தவிப்பதன் காரணம் என்ன, மாமா? நாம் ஒரு வார்த்தை சொன்னல் போதும்-உடனே எல்லாம் ம்ாறிவிடும் ! ஆஸ்திரிய அரசரை நாம் ஏற்றுக்கொண்டு, விக்வாசமாக இருப்பதாக உறுதி சொன்னல் போதுமே! தலைவர்கள் மக்களைத் தவருன வழியில் இழுத்துச் செஸ் கிருர்கள்; தங்கள் சுயநலத்திற்காக மக்களைப் பலியிடு கிருர்கள் ! நம்மைச் சுற்றி எல்லா நாடுகளும் ஆஸ்திரிய