பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நீ சந்திர சூரியரின் ஒளியைக் காணும்படி வெளியே யிரு தல் அபாயமேயாகும் ! உன் அம்புகளும் என்னைத் ఫ్రి வராதபடி, உன்னை அடக்கமான இடத்தில் வைக்க வேண் டியது அவசியம். சிப்பாய்களே ! இவனைப் பிடியுங்கள் கட்டுங்கள் ! (உடனே டெல் கயிறுகளால் கட்டப் பெ கிருன்.) ஸ்டாபாச்சர் : கடவுளின் அருட் கரங்களால் இப்பொழுது தானே அவன் காப்பாற்றப் பட்டான்! அவனைய இன்னும்-? ஜெஸ்லர் : இனி அந்த அருட்கரங்களுக்கும் எட்டாத இடம் தான் சரி ! (சிப்பாய்களிடம்) குஸ்ட்ைடுக்கு இவ&ன: கொண்டு செல்லுங்கள்-நானும் இதோ வருகிறேன் ! ரோஸல்மன் : ப்படிச் செய்ய உமக்கு அதிகாரமில்லை ! சுவிஸ் பிரஜையை வளியிடத்தில் கொண்டுபோய் அடைத்து வைக்கச் சக்கரவர்த்திக்கே உரிமை கிடையாது! எங்கள் சுதந்திரச் சாசனங்களைப் படித்துப் பாரும்! ஜெஸ்லர் : சாசனமா ? நான்தான் சாசனம், அரசாங்கமே நான்தான், நான் இட்டதுதான் சட்டம் ! நீங்கள் எல் லோரும் கலகக்காரர்கள்! நானும் எல்லாவற்றையும் அறிந்துதான் இருக்கிறேன். உங்களில் இந்த ஒருவனுக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்த பிறகாவது, மற்றவர்கள் அடங்கி நடந்து பிழைத்துக் கொள்ளுங்கள்! (அவர் வெளியேறுகிரு.ர். பெர்தா, ருடென்ஸ் ருடோல்ப் முதலியோரும் சிப்பாய்களும் தொடர்ந்து செல்கின்றனர். பிரிவடிார்ட்டு: லிதோல்டும் மட்டும் தங்கியிருக்கின்றனர். பெரிய வால்டர்: எல்லாக் கதையும் முடிந்து விட்டது அவர் என்னையும் என் குடும்பத்தையுமே அழித்துவிடத் தீர் மானித்து விட்டார்! ஸ்டாபாச்சர் : டெல், இனி நம் திட்டத்தின் கதி என்ன ? நீ சிறைப்பட்டதும், நாங்கள் எல்லோருமே சிறைப்பட்ட மாதிரித்தான் ! o குடியானவர்கள் : இனி யாரை - நம்பி வாழப் போகிருேம்? எங்கள் ஒரு நம்பிக்கை நீதானே! i.