பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மெல்ச்தல் : ஒரே நாளில் எல்லாம் விழுந்துவிடும்! வெர்னர் : பிரபுக்களும் ஐக்கியமாய்ச் சேர்ந்திருக்கிருர்களா? மேல்ச்தல் : அவர்களைப்பற்றிச் சந்தேகமில்லை; எங்களுக்கு உதவி வேண்டுமானல், நிச்சயம் அளிப்பார்கள். ஆலுைம், ಡ್ಗಿ ಶಿ! குடியானவர்களிடமே சத்தியம் வாங்கியிருக் ருேம். வெர்னர் : (வியப்புடன் எழுந்து) பிரபுக்கள் தயவில்லாமல் இவ்வளவு பெரிய காரியத்தைத் தானே முடிக்கக் குடி யானவர்களுக்குத் துணிவு வந்துவிட்டதா? அவ்வள்வு தன்னம்பிக்கை பிறந்துவிட்டதா? நல்லது, ந்ல்லது ! நாங்கள் இனிமேல் அவர்களுக்குத் தேவையில்லை! நாங்கள் அமைதியாக மடியலாம்! புதுத் தலைமுறை தோன்றி விட்டது. சுதந்திரச் சமுதாயத்தை இனி யாரும் அசைக் கவோ, அழிக்கவோ முடியாது! இனி மனிதன் கூனிக் குறுகிக் கிடக்கமாட்டான், கம்பீரமாக நிமிர்ந்து நிற்பான்! (குழந்தை வால்டரின் தலைமீது கையை வைத்துக்கொண்டு) ஆப்பிள் இருந்த தலை இதுதானே! இந்தத் தலைதான் இந்த நாட்டுச் சுதந்திரத்தின் சின்னம்! இது மேலானஉயர்ந்த-எதிர்கால வாழ்வின் சின்னம்! துன்பக் கடலைக் கடந்து இன்பக் கரை சேர்க்கும் கப்பல் இந்தத் தலை என் பதை மறவாதீர்கள்! நாமெல்லோரும் செய்திருக்க வேண்டிய தியாகத்தை யெல்லாம் இந்தக் குஞ்சுத்தலை வீரத்தோடு தாங்கி நின்றதை யாரும்-எந்த நாளும்மறக்க வேண்டாம் பழமை ஒழிந்தது புத்துயிர் மலர்ந்து விட்டது! = ஸ்டாபாச்சர் : (பெரிய வால்டரிடம்) அவர் கண்களைப் பார்! என்ன ஒளி வீசுகின்றது! இது வாழ்க்கையின் முடிவு கால ஒளியாகத் தோன்றவில்லை; எதிர்காலப் புதுவாழ்வின் சோதிய்ே الق (وقع வெர்னர் : இந்தக் கட்டிலில் கிடந்தபடியே என்னென்னவோ காட்சிகளைக் கண்டுகொண்டே யிருக்கிறேன். எத்தனை அரசர்கள்-இளவரசர்கள்-கவசம் தரித்த வீரப் பிரபுக்கள் இங்கே படையெடுத்து வந்தார்கள்! காடுபோல் அடர்ந்