82
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
ஆனால், சோதனை நடத்தி விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் என்ன கூறினார்கள்? -
"நாங்கள் நடத்திய சோதனையில் கிரீமால் ஒரு தீங்கும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. ஆனால், நாங்கள் பயன்படுத்திய கிரீம் உயர்ந்த ரகமாக இருக்கலாம். மற்றவை ஒரு வேளை கெடுதல் செய்யக் கூடியதாகவும் இருக்கலாம்” என்று கூறி மழுப்பி விட்டனர்.
(89)
தளராத முயற்சி
அவனோ ஏழை; அதிலும் அனாதை. பள்ளியில் நான்கு ஆண்டுகள் மட்டுமே படித்தான். அதற்கு மேல் படிக்க வசதி இல்லை. ஆனால், கதை, கட்டுரை எழுதுவதிலே ஆர்வம் உண்டாயிற்று.
அவனை எழுத விட்டால்தானே! அவன் எழுத உட்கார்ந்தால், கிண்டல் செய்வோர், கேலி செய்வோர் பலர். 'கதை எழுதுகிறானாம் கதை என்று கை கொட்டிச் சிரித்தவர் சிலர்.
தெரு ஓரத்தில் மூலை முடுக்குகளைத் தேடிச் சென்று அவன் எழுத உட்கார்ந்தால் போதும் உடனே விரட்டி அடிப்பார்கள்.
அவர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் அஞ்சி, இரவு நேரங்களிலே எழுதுவான். யாருக்கும் தெரியாமல், இரவு வேலைகளில் அவனுடைய கற்பனை வலுவடைந்தது.