86
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
ஒரு நாள் அந்த இளைஞன், ஞானியிடம் வந்து, “ஞானியாரே, நான் இவ்வளவு செலவழித்திருக்கிறேனே, இதற்கெல்லாம் பதிலாக நான் என்ன பொருளைப் பெறலாம்?” என்று கேட்டான். -
வாங்கி விற்கும் எந்தப் பொருளிலும், வாங்கிவிற்க இயலாத ஒர் அம்சம் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால், அந்தப்பொருளுக்கு ஒரு மதிப்பும் இல்லை” என்று கூறினார் ஞானி. -
"அப்படியானால் அந்த விலை மதிப்பற்ற அம்சம் என்னவோ?" என்று கேட்டான் இளைஞன்.
"மகனே! சந்தைக்கு வரும் ஒவ்வொரு பொருளிலும் அதை உற்பத்தி செய்தவனின் கண்ணியமும் நாணயமும் அடங்கியிருக்கும். அதுவே அதன் விலைமதிப்பற்ற அம்சம் ஆகும். எனவே, நீ ஒரு பொருளை வாங்குமுன், அதை உற்பத்தி செய்தவனின் பெயரைக் கவனி” என்றார் ஞானி.
(93)
நினைவுச் சின்னம் யாருக்கு?
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரசபை மண்டபத்தில் பலருடைய வெண்கலச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
அவை யாருடைய சிலைகள் என்று நினைக்கிறீர்கள்?
அடிப்படைக் கல் நாட்டியவர், திறப்புவிழா நடத்தியவர்