பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 119


சாதிபேதமற்ற திராவிடர்களோ அத்தகைய திகைப்பின்றி எங்கு கல்விவிருத்திக் கிடைக்கின்றதோ அங்கு விருத்தி பெற்று சுகமடைகின்றார்கள்.

இவ்விருத்தி சாதுரியத்தினாலேயே இவர்கள் பூர்வ புத்ததன்மத்தைத் தழுவி வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தில் இருந்தவர்கள் என்பதை எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.

- 2:23; நவம்பர் 18, 1908 -

சாதிபேதமற்ற திராவிடர்கள் புத்த தன்மத்தை தழுவியக் களங்கமற்றச் செயல்கள்

சாதிபேதக் குறூரச் செயல்கள் அற்று வாழ்ந்து வந்தவர்களாதலின் எத்தேச எச்சாதியோர்களுடனும் கலந்து பேதமில்லா போக்குவருத்தில் இருக்கின்றார்கள்.

அதிககஷ்டத்துடன் பலதேசங்களுக்குச் சென்று பணம் சம்பாதித்த போதிலும் அவற்றை தான்மட்டிலும் அநுபவிக்காமல் தனது பந்து மித்திரர்களுக்கும் அளித்து போஷித்து வருவார்கள்.

இக்கூட்டத்தார் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வருவதினால் சத்துருக்கள் முன்னிலையில் சீவித்திருக்கின்றார்கள். இத்தகைய சீவ காருண்யமும், பரோபகாரச் செயலும் புத்ததன்ம அநுபவங்களேயாம்.

சாதிபேதமற்ற திராவிடர்கள் எதுவரையில் சுகநிலை பெற்றிருந்தார்கள் என்னும் காலவரை.

மகதநாட்டரசர்கள் அசோகச் சக்கிரவர்த்தி, மணிவண்ணன், சீவகன் முதலிய அரசர்கள் ஆளுகைவரையிலும் யாதொரு குறைவுமின்றி சகல சுகங்களையும் அநுபவித்துக் கொண்டு வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களில் நிறைந்திருந்தபடியால் இவ்விந்துதேசம் முழுவதும் சீரும் சிறப்பும், அமைதியும், ஆற்றலும் பெற்றிருந்தது. இத்தேசத்தை பரதகண்டம் என்றும் இந்தியா என்றும் வழங்கிவருங்காரணம். பரதரென்பதும், வரதரென்பதும் புத்த பிரானுக்குரிய ஆயிரநாமங்களில் ஒன்றாகும். அவற்றுள் புத்தரது தன்மமும், பெளத்தவரசர் அரசாட்சியும் இத்தேசமெங்கும் நிறைந்திருந்தபடியால் வடபரதகண்டமென்றும், தென்பரத கண்டம் என்றும் சிலகால் வழங்கிவந்தார்கள்.

வீரசோழியம்

தோடாரிலங்குமலர் கோதிவண்டு / வரிபாடு நீடு துணச்சேர்
வாடாதபோதி நெறிநீழன்மேய / வர தன் பயந்த வறநூல்.

சூளாமணி

மற்றவர் மண்டில மதனுளூழியா / லேற்றிழிபுடையன லிரண்டு கண்டமாந்
தேற்றிய லிரண்டினுந் எலுந் தென்முகத்தது / பாற்றிரும் பகழினாய் பரதகண்டமே.

இவ்வகையாக வடபரதம், தென்பரதமென்று சிற்சிலர் வழங்கிவந்த போதிலும் பெரும்பாலும் புத்தபிரானை ஐந்தவித்து இந்தியத்தை வென்ற வல்லபங்கொண்டு இந்திரரென்னும் ஓர் பெயரால் அழைத்ததுமன்றி இத்தேசம் எங்கும் இந்திரர்விழா, இந்திரவிழாவென்று புத்தபிரான் பிறந்தநாளையும், அவர் பரிநிருவாணம் பெற்ற நாளையும் கொண்டாடிய குதூகலத்தால் புத்ததன்மத்தை இந்திர அறநூல், இந்திரர் தன்மமென்றும், புத்ததன்மத்தை அநுசரித்த மக்களை இந்தியர்கள் என்றும், அவ்விந்தியர்கள் வாசஞ்செய்த தேசத்தையும் இந்தியாவென்றும் அதனை எல்லைபகுப்பால் தென்னிந்தியா வடயிந்தியா என்றும் நாளது வரையில் வழங்கிவருகின்றார்கள்.

மணிமேகலை

இந்திரரெனப்படு மிறைவ தம்மிறைவன்றந்தநூற் பிடகம்.
இந்திர விழாக்கோல்.

சிலப்பதிகாரம்
இந்திரர்விழா