பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 121


பசுக்களின் விருத்திசெய்து அதன் பலனுகர்வோருக்கு கோவலர், இடையர், கோவிருத்தினர், இப்பரென்றும்,

பலப் பொருட்களை விற்று தனவிருத்திசெய்வோருக்கு வணிகர், நாய்க்கர், பரதரென்றும்,

உப்புவிற்போருக்குப் பெயர் உவணரென்றும்,

கல்வியிற் தேறினோருக்குப் பெயர் கலைஞர், கலைவல்லோரென்றும்,

சகலகலை தெரிந்தோத வல்லோர்க்குப்பெயர் மூத்தோர், மேதையர், மேலோர், கற்றவர், விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞர், அவை வித்தையோரென்றும்,

தேகலட்சணங்களும், வியாதியின் குணாகுணங்களும் அறிந்து பரிகரிப்போருக்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர் மாமாத்திரரென்றும்,

மண்ணினாற் பாத்திரம் வனைவோருக்குப் பெயர் மண்ணீட்டாளர், குலாலர், குயவர், கும்பக்கரர், வேட்கோவர், சக்கிரி, மடப்பகைவரென்றும்,

கரும்பொன்னாகிய இரும்பை ஆளுவோருக்குப் பெயர் கன்னாளர், கருமார், கொல்லர், மருவரென்றும்,

மரங்களை அறுத்து வேலை செய்வோர்க்குப் பெயர் மரவினையாளர், மயன், தபதி, தச்சரென்றும் பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற்கொல்லர் தட்டார், சொர்ணவாளர், அக்கரசாலையர் என்றும்

கல்லினும், மண்ணினும், மனை யுண்டுசெய்வோருக்குப் பெயர் மண்ணீட்டாளர், சிற்பாசிரியர் என்றும்

வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் பெயர் தூசர், ஈரங்கோலியர், வண்ணாரென்றும்,

வஸ்திரங்களைத் தைப்போருக்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்,

உயிர்வதையாகிய கொலைபுரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும்,

செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கார், கந்திகளென்றும்,

கள் விற்போர்க்குப் பெயர் துவசர், பிழியர், பிடியரென்றும்,

மதகரி யாள்வோர்க்குப் பெயர் பாகர், யானை பாகர், ஆதோணரென்றும்,

அரண்மனை காப்போர்க்கு பெயர் மெய்காப்பாளர், காவலர், கஞ்சுகி யென்றும்

மரக்கலம் ஓட்டுவோர்க்குப் பெயர் மாலுமி, மீகாமன், நீகாமனென்றும்,

இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்,

தோல்களை பதமிடுவோர்க்குப் பெயர் இயவர் தோற் கருவியாளர் என்றும்

தோற்பறைக்கொட்டி துளைக்குழலூதும் நரம்பு கருவியாளருக்குப் பெயர் குயிலுவரென்றும்,

ஓர் சங்கதியை மற்றவர்க்கு அறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும்,

இஸ்திரிபோகத் தழுந்தினோருக்குப் பெயர் பல்லவர், படிறர், இடங்கழியாளர், தூர்த்தர், விலங்கர், காமுகரென்றும்,

பொறாமெயுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சகரென்றும்,

பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோரென்றும்,

அன்னியர்பொருளை அபகரித்து சீவிப்போருக்குப் பெயர் கரவடர், சோரர், தேனர், பட்டிகர், புறையோர், கள்ளரென்றும்,

கொடையாளருக்குப் பெயர் புரவலர், ஈகையாளர், வேளாளர், தியாகி, வேள்வியாளர் உபகாரரென்றும்,

தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர், அகிஞ்சர், பேதை, இல்லோர், வறியர், ஆதுலர், ஏழை உறுகணாளர், மிடியரென்றும்,