பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மற்றும் பௌத்தநூல் சுத்தனியாதாவின் உட்பிரிவு சப்பியசுத்தாவில் மண், பெண், பொன்னென்னும் மூவாசைகளையுந் தவிர்த்து பிறவியை ஜெயித்த மகாஞானி எவனோ அவனை அரியனென்றும், சிறந்தோனென்றும் வரையப்பட்டிருக்கின்றது.

மற்றும் சுத்தனிபாதா அதனுட்பிரிவு அத்த கவர்க்கா சுத்தகசுத்தாவில் அரியமாக்கா அதாவது பிணி, மூப்பை ஜெயித்தலே அரியமார்க்கமென்றும் வரைந்துள்ளார்கள்.

பாலிசுத்தம்

ஸத்தனு பஸிதி பக்கதிஞான / திஷடியி பாப ததாவநானம்.

சுத்த

அறிய அட்டாங்கிக் கோமாக்கா / நிர்புத்தி ஷர்மா காமீனோ
பத்தியனிபாதா.

சுத்த

நிஸ்ஸோ விஹா ரோ / நெய்பா விஹா ரோ
பிரஹமா விஹா ரோ / அரியா விஹா ரோ.

இத்தியாதி பௌத்த சூத்திரங்களிலும், அரியவென்னும் மொழியை சிறந்த நிலைகளில் குறிப்பிட்டிருக்கின்றார்களன்றி ஆரியவென்னும் மொழி கிடையாது.

ஆதலின் பெளத்தர்கள் எழுதியுள்ள கலைநூற்களில் அரிய வென்னு மொழிக்கு சிறந்த, சிரேஷ்டவென்னும் பொருளும், ஆரியரென்னு மொழிக்கு மிலைச்சர், மிலேச்சரென்னும் பொருளுங் குறித்திருக்கின்றார்கள்.

ஈதன்றி தம்மபாதா வென்னும் நூலில் தன்மமார்க்க நீதியில் நின்று ஆனந்தத்துடன் சாந்தமன அமைதி பெற்றவரெவரோ அவரே அரியர், நித்தியர், போதித்த நீதியில் ஆனந்தத்துடன் இருப்பர். பண்டிதாவென்று புத்தபிரானுக்குரிய நற்செயல் பெருக்கப்பெயராகவும், விவேகவிருத்தியின் பெயராகவும் குறித்திருக்கின்றார்கள்.

அப்பாலிமொழியை தற்காலம் இங்கிலீஷ்பாஷையில் அரியவென்றும், ஆரியவென்றும் சப்தபேதமின்றி வழங்கிவருகிறபடியால் பொருள் பேதப்பட்டிருக்கின்றது.

அரியரென்பது சிறந்தோரென்றும் ஆரியரென்பது மிலேச்சர்களென்றுங் கூறத்தகும். குமானிடர்தேசத்தில் தங்கியிருந்த மிலேச்சர்கள் இந்துதேசமெங்கும் பரவி யாசகசீவனத்தால் சீவித்து வந்தவர்கள் நாளுக்குநாள் இத்தேசத்தோர் புத்தமார்க்கத்தைத் தழுவி ஒற்றுமெயிலும், ஒழுக்கத்திலும் சுகம் பெற்று ஆந்தர், கன்னட, மராஷ்டக, திராவிடமென்னும் பாஷை பேதங்களன்றி மற்றுமோர் பேதங்களில்லாமல் வாழ்ந்துவருவதுடன் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களும், இந்திர வியாரங்களாகும் புத்தமடங்களிற்றங்கிய அறஹத்துக்களென்னும் அந்தணர்களையே பயபக்த்தியுடன் வணங்குவதையும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைப் புரிவதையும் பார்த்துவந்தார்கள்.

- 2:27, டிசம்பர் 16. 1908 -

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் நால்வரின் தொழில் விவரம்

முன்கலை திவாகரம்

அந்தண ரறுதொழில்

ஒத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் / யீத வேற்றவென் றிரு மூவகை
ஆதிகாலத் தந்தண ரறுதொழில்.

அரசரறுதொழில்

அரசரறு தொழிலோதல் வேட்டல் / புரைதீரப் பெரும்பார்ப் புரத்தவீதல்
கரையாறு படைக்கலங்கற்றல் விசயம்.

வணிகரறுதொழில்

வணிகரறுதொழில் ஒதல் வேட்டல் / யீத லுழவு பசுக்காத்தல் வாணிபம்