பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 133


பாடினாரென்று கூறினார். உடனே நாமெழுந்து அவ் வார்த்தையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்கு யாம் கேழ்க்கவேண்டிய கேழ்விகள் சிலதுண்டு. அவற்றை வினவலாமோ என்றோம்.

ஆட்சேபமின்றி கேழ்க்கலாமென்றார். தற்காலம் பறையர்கள் என்று அழைக்கப்படுவோர் மிஷநெரிமார்கள் கருணையால் பி.ஏ, எம்.ஏ, முதலிய கெளரதா பட்டங்களை பெறுகின்றார்களே அவர்கள் யார் வித்துக்குப் பிறந்திருப்பார்கள். ஜேயிலென்னுஞ் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் ஐயர்மார்கள் யாவரும் யாருடைய வித்துக்களுக்குப் பிறந்திருப்பார்கள் என்று யோசிக்கின்றீரென்றோம். ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து கொண்டார்.

ஆனரேபில் பி. அரங்கைய நாயுடுகாரவர்களும், எம். வீரராகவாச்சாரியாரவர்களும் எம்மை கையமர்த்தி வேறுசங்கதிகளைப் பேச ஆரம்பித்துக் கொண்டார்கள்.

இவ்வகையாகத் தங்களை பிராமணர்கள் என்று உயர்த்தி சகல சுகமுமடைந்து கொள்ளுவதற்கும் மேன்மக்களாம் திராவிட பௌத்தர்களைப் பறையர்கள் என்றும், தாழ்ந்தசாதிகள் என்றும் கூறிப் பலக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திக் கொண்டதுடன் தங்கள் சுகசீவனத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட மனு தருமசாஸ்திரம் என்னும் கற்பனா நூலில் இப்பறையன் தாழ்ந்தவன் என்றும் குறிப்பிட்டு வைத்திருக்கின்றார்கள். ஆயினும் பதின்மூன்று பறையர்கள் பெயர்கள் அவற்றுள் கிடையா.

மநுதருமசாஸ்திரத்திலுள்ள வார்த்தையைக் கொண்டே அந்த சாஸ்திரத்திற்குரிய சிலர்களை அடுத்து இம்மநு நூல் சமஸ்கிருதத்தினின்று, தமிழில் மொழி பெயர்த்துள்ளதாகக் கூறியிருக்கின்றீர்களே, இப்பறையன் என்னும் மொழிக்கு சமஸ்கிருதத்தில் எம்மொழிக் கூறப்பட்டிருக்கின்றது, அவற்றை சரிவர விளக்கவேண்டும் என்று பலபேரை வினவியும் சமஸ்கிருத மொழி எம்மொழியினின்று இப்பறையன் என்னும் மொழிப் பெயர்த்த விவரத்தைக் கூறியவர்கள் ஒருவரையும் காணேன்.

இத்தகைய மநுதருமசாஸ்திரத்தை நம்பி நடத்தற்கு ஆரம்பித்து விட்டபடியால் ரூபாயிற்கு நான்குபடி அரிசி விற்கவும், தான்யங்கள் யாவும் குறையவும், குடிகள் யாவரும் பசி பட்டினியால் மடியவும் நேர்ந்துவிட்டது.

காரணம், மனுதர்மசாத்திரம். அந்தணர் ஆபத்தருமம் 84-ம் வசனம்.

“சிலர் பயிரிடுந்தொழிலை நல்லத் தொழிலென்று நினைக்கின்றார்கள். அந்த பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது”

என வரைந்திருக்கும் இம்மநுதர்மமசாஸ்திரத்திற்குரியவர்கள் பயிரிடுந்தொழில் நிந்திக்கப் பட்ட தொழிலென்று நீக்கிக்கொண்டே வந்துவிட்டபடியால் பூமிவிருத்திகள் குறைந்து பாழுக்கு வந்துவிட்டது.

இத்தகைய மநுசாஸ்திரத்தை நம்பாமல் பூமியை சீர்திருத்தி பயிரிடுந்தொழிலையே மேலாகக் கருதிச் செய்துவந்த பௌத்தர்களைப் பறையர் பறையர் என்று தாழ்த்திப் பலவகையிடுக்கண்களைச் செய்து பலதேசங்களுக்குஞ் சிதறியோடும்படிச் செய்துவிட்டார்கள்.

மற்றும் உள்ளவர்களையும் எலும்புந் தோலுமாகக் காயவைத்து அவர்களுக்கு உள்ள ஆடுமாடுகளையும், பூமிகளையும் அங்கங்கு விட்டு வோட்டும்படியான வழிகளையும் தேடிக்கொண்டும் வருகின்றார்கள்.

இவர்களை சுத்தசலத்தண்டைநாடவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும் செய்தவிவரம்.

திராவிட பௌத்தர்களை சுத்தஜலத்தில் குளிக்கவிடாமலும், சவரஞ் செய்யவிடாமலும், வஸ்திரங்களை வெளுக்கவிடாமலும் அசுத்த நிலையில் வைத்துக் கொண்டிருந்தால் தாங்களவர்களைத் தாழ்ந்த சாதியோரென்றும், பறையரென்றும் தாழ்த்திக் கொண்டு வருவதற்கு ஆதாரமாக இருப்பதுடன் பறையர் என்றும் தாழ்ந்த சாதியோர் என்றும் கூறுகின்றீர்களே அதன் காரணம் என்ன என்று சில விவேகிகள் கேழ்ப்பார்களாயின் அவர்கள் அசுத்தமுள்ளவர்கள், தேக முதலிய சுத்தமில்லாதவர்கள், நீச்சர்களென்று கூறி