பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

588/ அயோத்திதாசர் சிந்தனைகள்


அக்காலத்தில் சீயமாபுரமென்னுந் தேசத்தில் சீயமாசேனனென்னும் அரசனும், இராமதத்தையென்னும் இராக்கினியும் இருந்தார்கள்.

பெளத்தவரசர்கள் யாவரும் புத்தசங்கங்களில் சேர்ந்து நீதியொழுக்கமும் விவேகமிகுதியும் உள்ளவர்களை தெரிந்தெடுத்து தங்களுக்கு மந்திரிகளாகச் சேர்த்துக் கொள்ளுவது வழக்கமாகும்.

அதுபோல் வேதியசாதியென்னும் சத்தியகோடனென்பவனை அவன்மாறு வேடமறியாமல் சீயமாசேனனென்னும் அரயன் மந்திரியாக எடுத்துக் கொண்டிருந்தான்.

மந்திரியும் பஞ்சசீலமாம் நீதிமார்க்கங்களைக் குடிகளுக்குப் போதித்து தானுமோர் பெளத்த குருபோலவே நடித்தும் வந்தான்.

இத்தகைய நடிப்பால் அரசனும் இவனை நீதிமான் என்று எண்ணி சகலகாரியாதிகளிலும் நம்பிக்கை வைத்திருந்தான்.

அக்காலத்தில் பத்திரமித்திரன் என்னும் ஓர் வணிகன், நவரத்தின வியாபாரஞ்செய்துக் கொண்டு சீயமாபுரஞ் சேர்ந்து தன் காலைக்கடன் கழித்து புசிப்பெடுத்துக் கொண்டு வருவதற்காய் இத்தேசமந்திரி சத்தியகோடனை நீதியானென்று எண்ணி அவனை அடுத்து தன்னிடமுள்ள இரத்தின கரண்டகமாஞ் செப்பை அவனிடம் ஒப்பிவைத்து நான் மறுபடியும் இதைவந்து கேட்கும்போது என்னிடம் கொடுக்கவேண்டும் நீதிமானேயென்று வேண்டினான்,

மந்திரியும் வேண்டிய நீதிகளைச் சொல்லி செப்பை வாங்கி வைத்துக் கொண்டான்.

வணிகன் பத்திரமித்திரனும் ஆற்றங்கரை சென்று தனது காலைக்கடனை முடித்துவிட்டு அன்னசத்திரஞ் சென்று புசிப்பெடுத்துக் கொண்டு மறுபடியும் மந்திரியிடம் வந்துசேர்ந்து தனது இரத்தினச் செப்பைக் கொடுங்கோளென்று கேட்டான்.

மந்திரி வணிகனைநோக்கி (இங்கு பத்து வரிகள் தெளிவில்லை)

வேதங்களை வாசித்தவனும், மெய்யுரையாட வேண்டியவனும் சகலவிருதுகளமைந்தவனும், அமைச்சனானவனும் வெண்குடைப்பெற்ற சீயவனின் காயமரையுற்றவனும் நீதிநெறிகளை ஆராய்ந்து மற்றவர்களுக்குப் போதிக்கும் மதியூகியுமாகிய நீர் நம்பி வைத்த பொருளை அபகரிக்கலாமோ அவ்வகை அபகரித்தலாகியச் செயலால் உம்மிடம் அமைந்துள்ள திருவாகிய கருணைநிதி நீங்கிவிடுவாளேயென்று கதரினான்.

வணிகன் மரத்தின் மீதேறிக்கொண்டும் கூறிய நீதிவாக்கியங்கள் யாவையும் கேட்டிருந்த ராணியானவள் வேவுகரை அழைத்து மரத்தின் மீதேறியுள்ள வணிகனை வரச்செய்து சங்கதிகள் யாவையும் ஆழ்ந்து விசாரித்து அரயனுக்கு விளித்து மந்திரியையும் வரவழைத்து சூதுக்களையும் வஞ்சகத்தையும் அறியக்கூடிய வழிகளால் விசாரித்தபோது மெய்விளங்கி மந்திரி அபகரித்திருந்த செப்பையுங் கொண்டுவந்து அரணியிடம் கொடுத்துவிட்டான்.

அரணியும் அரயனைவிளித்து செப்பை பார்த்தீர்களா என்றாள்?

அரயனும் சற்று நிதானித்து மந்திரியின் மணிகள் சிலதையும், வணிகனது மணிகளையும் அவன் செப்பிலிட்டு வணிகனை வரவழைத்து இம்மணிகள் உம்முடையவைகளோ என்றான்.

வணிகனும் செப்பிலிலுள்ள மணிகள் யாவையும் வெளியிலிட்டு தன்னுடைய மணிகள் ஒன்று தவிராமல் எடுத்துக் கொண்டு மற்றமணிகளை நீக்கிவிட்டான்.

இவைகளைக் கண்ணுற்ற அரசனும் அரணியும், வணிகன் செப்பிய வார்த்தைகள் யாவும் மெய், மந்திரியானவன் அன்னியன் பொருளை அபகரிக்கவேண்டிய இத்தியாதி பொய்களையுஞ் சொல்லி வணிகனை வஞ்சித்துவிட்டான்.

இத்தகைய வஞ்சகனை கொலைகளம் அனுப்பி குற்றமுள்ளோரை தெண்டிக்கத்தக்க ஏதுவை செய்துவிட்டு வணிகனாகிய பத்திரமித்திரனுக்கு மந்திரிபட்டம் அளித்துவிட்டு தாங்கள் துறவடைந்து புத்தசங்கஞ் சேர்ந்து விட்டார்கள்.