பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 589


இக்கதையினால் வேதியனென்னும் வேஷம் பூண்டும் அவனுக்குள்ள பொருளாசை அவனை விட்டு நீங்காது வணிகன் பொருளை அபகரித்துக் கொண்டும் அவனையே பறையனென்று இழிவுகூறியுள்ளதை,

மேருமந்திரபுராணம் பத்திரமித்திரன் கேள்விச் சருக்கத்தில் பரக்கக் காணலாம்.

227-வது பாடம்

செப்பிய நகர்க்குநாதன் சீயமாசேன் னென்பான்
வெப்பயனின் றறாதவேலான் வேந்தரைவென்ற வெற்றிக்
கொப்பமெ யின்றிநின்றா னாதலிற் கற்பகத்தை யொப்பான்
துப்புரம் தொண்டைவாயார் தொழுதெழு காமன் கண்டாய்

228

ஊனுமிழ்ந்திலங்கும் வைவேல் மன்னவனுள்ளத்துள்ளா
டேனுமிழ்ந் திலங்குழைம்பாற் றேவிதானிராமதத்தை
வானுமிழ்த் திலங்குமின்போல் வருந்துதுண்ணிடையாள் வாரி
தானுமிழ்ந் தமிழ்தம் பெய்த கலசம்போல் முலையினாளே.


229

வேதனான கங்குமாறும் புராணமும் விரிக்குஞ் சொல்லில்
தீதிலா சத்தியகோப னாமஞ்சீ பூதியென்பான்
போதிலர் முடியுனானுக் கமச்சனாய் புணர்ந்துபின்னை
தீதெலா மகற்றிவையுஞ் செவ்வியாற் காக்குநாளில்

வேறு

233

சுரந்த கார்முகில்போல் சுதத்தனன் / றிரந்தவாக்குயர் நீரவளித்தவன்
பரந்துலாம்பெயர் பத்திரயித்தனெம் / மரந்தை தீர்த்தலி னாமென வோதினார்

239

மணியு முத்தும் வைரமுஞ் சந்தனத் / துணியும் நல்லமிலுந் துகிலும்புர
மணயுந் தூரியுங் கொண்டு வரும் வி / சாரிணையில் சீயபுரம் துறவெய்தினான்.

351
(ஐந்து பாட்டுகள் தெளிவில்லை)

260

பிறர்பொருள் வைத்தல் கேட்டல் பிறர்தமக் கீய்தன்மாற்றன்
மறமென வன்றுசொன்ன வாய்மொழி மறந்திட்டீரோ
திறமல துரைக்கல் வேண்டாஞ் செப்புக்கொண் டிருப்பதன்றி
முறைமுறை பித்தராகி முடிந்தன மோகத்தாலே.
என்றலு மெழுந்துகோபத் தெறியெறி யென்னவோடிப்
பொன்றுமா ரடித்துநின்றார் புறப்படத் தள்ளப்போந்திட்
டன்றவ னடிந்துச்செப்புக் கொண்டதற் கவலமுற்றுச்
சென்றவன் றெருவுதோருஞ் சிலபகல் பூசலிட்டான்.
சத்தியகோட னென்னுஞ் சாதியால் வேதியன்றான்
வித்தத்தாற் பெரியன்றூய னென்றியான் மிகவுந்தேறி
வைத்தவென் மணியைக்கொண்டு தருகிலன் மன்னகேண்மோ
பித்தனு மாக்குமென்னைப் பெருபொருளடக்குவானே.

இவ்வகையாக வணிகன் அரயனிடம் முறையிட்டபோது மந்திரி இவ்விடம் வந்து ஐயா, இவனோர் பறையன் மறையவன்போல் வேடமிட்டுக் கொண்டு பொய்யைச் சொல்லுகிறானென்று கூறி அரயனை அனுப்பிவிட்டான்.

267

பறையனிக் கள்வன்றன்னைப் பார்த்திப னென்னைப்போல
மறையவனென்று கொண்டான்சபதத்தால் வஞ்சிப்புண்டு
பிறரவன் செய்கை யோரா னென்னையே பித்தனென்னக்
குறையுண்டோ வென்றுபின்னுங் கூப்பிட்டான் நீதியோதி.

மந்திரி வார்த்தையை மெய்யென்று நம்பி அரசன் சென்றவுடன் வெறி நாய்களையும், மதயானைகளையும் விட்டு வணிகனை துறத்த ஆரம்பித்தான். வணிகனும் பயந்து மரத்திலேறிக் கொண்டு நீதிகளை ஓத ஆரம்பித்தான்.

269

படுமத யானைவிட்டும் பாசத்தி னாயைவிட்டுங்
கொடிக்கரப் பேயன்றன்னைக் கடிக்கவென் றமைச்சன்கூறி