பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

646 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அதற்குதவியாக பௌத்தர்களால் தங்களது ஞானசாதனங்களில் தங்களுக்குள் காண்பான் காட்சியென்றும், ஆண்டான் அடிமையென்றும் சாதித்து வந்த மொழிகளின் அந்தரார்த்தம் இம்மிலேச்சர்களுக்குத் தெரியாதிருப்பினும் அம்மொழிகளையே பேராதரவாகக் கொண்டு தங்களை ஆண்டைகளென்றும் தங்கள் பண்ணை வேலைச் செய்யும் ஏழைக்குடிகளை அடிமைகளென்றும் வகுத்துக்கொண்டதுமன்றி வழங்குதலிலும் ஆரம்பித்துக் கொண்டதுடன், இவர்களைக்கொண்டே சமணமுநிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் அத்தேசத்தைவிட்டு துரத்தும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள்.

மிலேச்சர்களாகிய ஆரியர்கள் அவ்வகைப் போதிக்கினும் திராவிடபாஷை ஏழைக்குடிகள் பூர்வபக்திக்கொண்டு சமணமுநிவர்கள்பால் நெருங்காமலும், அவர்களைத் துரத்தாமலும் தூரவே விலகி நின்றுவிட்டார்கள்.

அவற்றைக் கண்டபுருசீகர்கள் ஓ! ஓ! இவர்கள் சுயபாஷைக் குடிகளாதலால் பூர்வ பயங்கரத்தை மனதில் வைத்து நெருங்காமலிருக்கின்றார்கள் என்றறிந்து திராவிடக் குடிகளை சமண முனிவர்கள்பாலே வர விடாது மராஷ்டகக் குடிகளில் கல்வியற்ற காலாட்சேனையாரை அடுத்து இத்தேசத்தில் மஞ்சட் காவிதுணியை யணிந்து கையில் ஓடேந்தி பிச்சையிரந்துண்ணுங் கருத்த தேகிகள் களவுசெய்வதில் மிக்க சாமார்த்தியமுடையவர்கள். அவர்களை மட்டிலும் இத்தேசத்தில் தங்கியிருக்கும் படி செய்துக் கொள்ளுவீர்களாயின் உங்கள் காவல்காப்பில் விழித்துக் கொண்டிருப்பதுமல்லாமல் அரசனது கோபத்திற்கும் உள்ளாகிவிடுவீர்கள். ஆதலால்வர்களை இத்தேசத்தில் நிலைக்கவிடாது ஓட்டிவிடுவீர்களாயின் சுகம் பெறுவீர்கள். அவ்வகை துரத்தாமல் விட்டுவிடுவீர்களாயின் நீங்களே துன்பப்படுவீர்களென்று கூறிய மொழியை மராஷ்டர்கள் மெய்யென்று நம்பி சமணமுனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பலவகைத் துன்பப்படுத்தி அறப்பள்ளிகளை விட்டகற்றியதுமன்றி மற்றும் வருத்துப் போக்கிலுள்ள சமணமுனிவர்களையும் அவ்வழிப் போகவிடாமல் தடுத்துப் பாழ்படுத்தி வந்தார்கள்.

விவேகமிகுத்த அரசர்களின் ஆதரவில்லாமல் சமணமுனிவர்களும் விவேக மிகுத்த உபாசகர்களும் பறையர், பறையரென நிலைகுலைந்து பல தேசங்களுக்குச் சென்று சோதிடம், வைத்தியம், விவசாயம் முதலியவற்றால் சீவித்து அக்கஷ்டத்திலும் உலக உபகாரிகளாகவே விளங்கினார்கள்.

மிலேச்சர்களோ நந்தனை சிதம்பித்துக் கொன்றவிடத்தைச்சுற்றிலும் வீடுகளைக் காட்டிக்கொண்டு அவற்றிற்குப் புறம்பேயுள்ள பூமிகளைப் பண்படுத்தி தங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துவருங்கால் மராஷ்டக பாஷையில் பிராமணவேஷ மணிந்துள்ளவர்களறிந்து தங்களது சுய பாஷைக்குரிய அரசனாகிய இலட்சுமணரௌவை அடுக்கவேண்டுமென்றெண்ணி ஒவ்வொருவராக வந்து சேருவதற்கு ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அவர்களைக் கண்ட முதல் வேஷப்பிராமணர்களாகிய புருசீகர்களுக்கு அச்சமுண்டாகி ஓ! ஓ! ஏது நம்முடைய வீடுகளுக்கும், பூமிகளுக்கும் மோசம் நேரிடும் போலிருக்கின்றது. மராஷ்டக்குடிகளோ நம்மெய்ப்போன்ற பிராமண வேஷ மணிந்திருக்கின்றார்கள் அவர்களுடைய கூட்டமும் அவர்களைச் சார்ந்தவர்களும் இவ்விடயம் பெருகிவிடுவார்களாயின் அவர்களது வாக்கையே அரசன் நம்புவானன்றி நம்முடைய வார்த்தையை நம்பமாட்டான். ஆதலால் இத்தேசத்தைவிட்டு அவனை அகற்றிவிடவேண்டுமென்று ஆலோசித்திருக்குங்கால் வேங்கடத்திலிருந்து மலையனூரானென்னும் ஓர் பெருத்த வியாபாரி தனது கூட்டத்தில் காசிகுப்பி, வளையல், கீரைமணி, சந்தனப் பேழை, தந்தமோதிரம், ஆணிக்கோர்வை, பச்சை முதலியப் பொருட்களைக் கொண்டுவந்து அரசனிடம் இரட்டித்தப் பொருள் சம்பாதிக்கலாம் என்னும் ஆசையால் அவ்விடமுள்ள ஓர் சோலையில் வந்து தங்கியிருந்தான்.

அவற்றை அறிந்த புருசீகர்கள் அவ்விடஞ்சென்று அவர்களுடைய தேககாத்திரத்தையும், பாஷை மாறுதலையுமறிந்து,