பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இதுவரையிலுஞ் சொல்லிவந்த நாஷனல் காங்கிரஸென்னும் வார்த்தை சொல்லின் மயமாயிருந்தன்றி அநுபவத்திலில்லை என்பது காங்கிரஸ் கலைந்த கலகமே போதுஞ் சான்று.

எடுத்தவிஷயம் தொடுத்த முயற்சியினின்றும் சாதிபேத மதபேதங்களின் பிரிவால் முயற்சி கெட்டு இகழ்ச்சிக்குள்ளாகிவிட்டது.

பூர்வத்திலிருந்த ஆந்திர சாதி, கன்னட சாதி, மராஷ்டகசாதி, திராவிட சாதியென வெவ்வேறு பாஷைகளை சாதிக்குங் கூட்டத்தினராயிருந்தும் புத்தமார்க்கமென்னும் சத்தியதருமத்தைப் பின்பற்றி நின்றபடியால் அவர்களெடுத்துள்ள சீர்திருத்தங்கள் யாவுஞ் சிறப்புற்று விளங்கியதாக சரித்திரங்கள் கூறுகின்றது.

அவ்வகைச் சீரையுஞ் சிறப்பையுங் கெடுத்த அசத்திய சாதிகளையும் அசத்திய தன்மங்களையுஞ் (பாய்காட்) செய்யாமல் அவன் சரக்குகளை வாங்கலாகாது, இவன் சரக்குகளைக் கொடுக்கலாகாதென்னும் (பாய்காட்) வீண் புரளியால் ஒருவருக்கொருவர் மனத்தாங்கலுண்டாய் மண்டையோடு மண்டை உருளும்படி நேரிடுகின்றது.

இராஜாங்கத்தை சீர்திருத்த முயன்ற காங்கிரஸ் கமிட்டியாரில் மிதவாதிகளாயிருந்தாலென்ன, அமிதவாதிகளா யிருந்தாலென்ன, வாதத்தை வாயினால் வாதிப்பதைவிட்டு கைநீட்டும் வாதத்தில் ஆரம்பித்தவர்கள் கற்றவர்களாமோ. இதுதான் நாஷனல் காங்கிரஸென்னும் பெயரோ. மிதவாதிகளாகிய காங்கிரஸ் கமிட்டியார் இத்தகைய கலகத்தால் கலைந்திருக்க அமிதவாதிகளின் சுதேசியக் கூட்டங்களில் அதிகப்போருண்டாகுமாயின் பரதேசிகளின் பஞ்சாயத்தும் பரதேசி படைகளின் பாதுகாப்பும் வந்தே தீரவேண்டும்போல் காணுகின்றது. நாவினாற் சுதேசிகளென்னுங் கூச்சலும் நடத்தையால் பரதேசிகளை யேக்கலென்னும் பேச்சிலும் பேர்பெற்றவர்கள் கையில் சுயராட்சியங் கொடுத்துவிட்டால் என்ன செய்வார்கள்.

பறையர்களுக்கு கவர்னர் வேலையும் பாப்பார்களுக்குப் படைத்தலைவர்கள் வேலையும் கொடுப்பார்களா, ஒருக்காலுங் கொடார்கள். காரணம் தாழ்ந்த சாதியோர்களுக்கு உயர்ந்த வேலைகளைக் கொடுக்கப் படாதென்றும் உயர்ந்தசாதி பாப்பார்களுக்குப் படை பயிர்ச்சி தெரியாதென்றுங் கட்சிசெய்வார்கள். ஆனால் பாப்பார்களுக்கு கவர்னர் வேலைகளும் பறையர்களுக்குப் படைத்தலைவர்கள் வேலையேனுங் கொடுப்பார்களா, அதுவுங் கொடுக்கப்போகிறதில்லை. காரணம் பாப்பாரென்போர்களுக்கும் பறையரென்போர்களுக்கும் உண்டாயிருக்கும் பூர்வ புத்தமார்க்க விரோதத்தைக்கொண்டு பார்ப்பார்களைப் பறையர்கள் பழுக்கப் பார்ப்பார்களென்னும் பீதியால் படையிலுஞ் சேர்க்கமாட்டார்கள். இவ்விரு கட்சியில் சுயராட்சியம் எப்போது நிலைக்குமென்னில், பறையர்களென்போர்களைப் பாப்பார்கள் கண்டவுடன் துள்ளிவோடும் பயம் நீங்கி பட்சமுண்டாகுங்காலமும் பறையர்களென்போர் வாசஞ்செய்யுங் கிராமத்துள் பாப்பார்களென்போர் வந்தவுடன் அவர்களை அடித்துத்துறத்தி சாணச்சட்டியை உடைக்கும் வழக்கமும் முற்றிலும் நீங்கி சகோதிரர்கள் வந்தார்கள் என்னும் காலமும் உண்டாகி புத்த தருமம் பூரணமாயின் அன்றே சுயராட்சியம் நிலைக்கும் என்பது திண்ணம்.

இத்தகைய ஆராய்ச்சியில் சாதிகளை பாய்காட் பண்ணாமலும் சமயங்களை பாய்காட் பண்ணாமலும் சாராயக் கடை கள்ளுக் கடைகளை பாய்காட் பண்ணாமலும் அன்னியதேச ஜவுளிகளை பாய்காட் பண்ணுவதால் 3-ரூபா விலையிலிருந்த மல்பீசுகள் 4-ரூபா விலையிலும், 5-ரூபா விலையில் இருந்த மல்பீசுகள் 7-ரூபா விலைக்கும் வந்துவிட்டது. ஆனால் சுதேசிய மல்லுகளோ சுத்த பூஜ்ஜியமே.

ஊராரைக் கொண்டே, உப்பு விளைவிப்பதுபோல் புஞ்சையும் விளைவிக்கும்படி ஆரம்பித்துக்கொள்ளுவார்களாயின் (பாய்காட்) பலன்