பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 47


அரண்கட்டி சமய பேதமென்னும் அகழி தோண்டி ஒற்றுமெய் அற்ற ஒன்பது கோடி படையைக் கொண்டவன் சாதிபேதமற்ற அரண் சமயபேதமற்ற அகழி ஒற்றுமெய்க்கொண்ட படை ஒரு நூறுடையவனை ஜெயிக்கமாட்டான் என்பது திண்ணம்.

- 1:40; மார்ச் 18, 1908 -

ஆதலின் சுதேசியமென்பதும் சுயராட்சியம் என்பதும் ஒற்றுமெயால் நிலைக்குமேயன்றி ஒற்றுமெய்க்கேட்டால் நிலைக்காவாம். நமது தேசம் ஒற்றுமெய்க்கேட்டில் இருப்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறியலாம்.

அதாவது தற்காலந் தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் நடந்தக் கலகத்தைப்பற்றி கலைக்ட்டரும் மற்றுமுண்டான ஜட்ஜுகளும் சில சுதேசிகள் என்போரைத் தருவித்துப் பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் வாசித்தவர்களாயிருந்தும் உங்களுக்கான ரிக்கார்டுகளையும் உங்கள் தேச சுகாதாரத்திற்கென்று கட்டியிருந்தக் கட்டிடங்களையும் இடித்துப் பாழாக்கி விட்டீர்களே இனி அக்கட்டிடங்களையும் ரிக்கார்டுகளையும் புதுப்பிக்க வேண்டுமானால் உங்கள் துகைகளைக்கொண்டே செய்ய வேண்டியதா யிருக்கின்றபடியால் ஏழைக் குடிகளுக்கு இடுக்கண் செய்பவர்கள் நீங்களாக இருந்துக்கொண்டு இராஜாங்கத்தின்பேரில் வருத்தப்படுவதில் யாதுபயன். உங்கள் கைபைக் கொண்டு சிரசிற்குட்டி நோயெடுக்கின்றதென்னில் அதனை யார் சகிக்கவேண்டிய தென்றார்களாம். அதற்கு சுதேசிகள் என்று ஏற்பட்ட பெரியமனிதர்கள் யாதுமறுப்புக் கூறினார்களாம் என்றால், ஐயா நாங்கள் எல்லோரும் வாசித்தவர்கள் அவ்வகை வேலை செய்யமாட்டோம் இவ்விடம் வாசஞ்செய்யுந் தாழ்ந்த வகுப்பார்களே கூடி இத்தகைய கெடுதிகளை உண்டுசெய்து விட்டார்கள் என்று கூறினார்களாம்.

அந்தோ! பிள்ளையுங்கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் காரியாதிகளை அந்தரங்கத்தில் முடிவுசெய்து பகிரங்கத்தில் ஏழைகளைக் காட்டிக்கொடுக்கின்றார்கள். இதை நந்தேயத்தார் கவனிக்காமலிருப்பது கவலையேயாம்.

அதாவது தற்காலம் நமது தேசத்தில் சுதேசிகள் சுதேசிகள் என்றுக் கூச்சலிடுவோர் எதார்த்த சுதேசிகளா அன்றேல் சமயசுதேசிகளா என்று ஆராயவேண்டியது அவசியமாகும். ஏனென்பீரேல், எதார்த்த சுதேசிகளாய் இருப்போர் தங்கள் சுதேசத்தை சீர்திருத்துங்கால் காரியத்தின்பேரிற் கண்வைத்து நுண்ணிய கருமமாயினும் முன்பின் எண்ணிசெய்வார்கள். அங்ஙனம் எண்ணாது ஏழைக்குடிகளை இடுக்கத்திற்கு உள்ளாக்குவோர் எதார்த்த சுதேசிகளாவரோ, ஒருக்காலும் ஆகார்கள், சமயசுதேசிகளேயாம்.

இதன்பகரமாய் ஓர் நியாயநிலையுண்டு. அதாவது இரண்டு ஸ்திரீகள் ஒரு குழந்தையைப் பிடித்துக்கொண்டு இது என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை அல்லவென்று பெரும் போரிட்டு முடிவில் நியாயாதிபரிடஞ் சென்றார்கள். நியாயாதிபரோ அவ்விரு மாதர்களையும் நேரில் அழைத்து விசாரிணைப்புரியுங்கால் அக்குழந்தையை இருவருந் தங்கள் தங்கள் குழந்தையென்றே சாதித்தார்கள். அவ்விருவருக்குந் தக்கசாட்சியம் இல்லாமற்போனதால் நீதியதிபர் அவர்களை நோக்கி நீங்கள் இருவரும் குழந்தையை என்னுடையவை என்னுடையவை என்று கூறுகிறபடியால் உங்களிருவருக்கும் பொதுவாய்க் குழந்தையைக் கொன்றுவிடும்படித் தீர்ப்பு செய்கின்றேன், யாதுசொல்லுகிறீர்கள் என்றார். அதில் என் பிள்ளையென்றுப் பொய்க்கூறியவளோ அப்படியே கொன்றுவிடலாம் என்றாள். அக்குழந்தையைப் பெற்றவளோ நீதியதிபரை நோக்கி ஐயன்மின் தாங்கள் அக் குழந்தையைக் கொலைபுரிய வேண்டாம் அவளிடமே கொடுத்து விடுவீராயின் கண்ணிலேனும் பார்த்திருப்பேன் என்று மன்றாடினாள்.

அதை அறிந்த நீதியதிபர் குழந்தையை கொலை புரிய வேண்டாம் என்று மன்றாடுகிறவளே ஈன்றவள் என்றும் கொலைபுரியலாம் என்பவள்