பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 377

செய்யாதும், வதைசெய்யாதும், ஜீவர்கள் மேல் அன்பையே ஒரு பிறப்பில் பெறுக்குவனேல் அவன் மறுபிறப்பில் மன ஆனந்தத்துடன் நீடித்து வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் கற்களினாலும், கொம்புகளாலும் அடித்தும் தண்டாயுதங்களையும், வாட்களையும் ஜீவர்கள் மேல் பிரயோகித்து ஒருபிறப்பில் வதைபுரிவனேல் அவன் மறுபிறப்பில் துக்ககரமான ஜனனமெடுத்து சதா பிணியாளியாய் காலத்தைக்கழித்து மாள்வான். இவ்வுலகில் ஒருவன் கற்களினாலும், கொம்புகளாலும் ஜீவர்களை அடிக்காதும், தண்டாயுதங்களையும், வாட்களையும் ஜீவர்கள் மேல் ஒரு பிறப்பில் பிரயோகிக்காதிருப்பனேல் அவன் மறுபிறப்பில் சுககரமான ஜனனமெடுத்து வாதையைத் தரும்படியான பிணிகளற்று வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் காமமும், கோபமுமுள்ளவனாகவும், அற்ப வார்த்தைக்கும் ஆறாக் கோபமுள்ளவனாகவும், கடுங்கோபமுள்ளவனாகவும் கன்னெஞ்ச முள்ளவனாகவும், கோபமும் பொறாமெயுமுள்ளவனாகவும், தூர்த்த குணமுள்ளவனாகவும் ஒருபிறப்பில் இருப்பனேல் அவன் மறுபிறப்பில் அவலட்சணமும், அந்தக் கேடுள்ளவனாகவும் பிறந்து வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் காமம், கோபமற்றவனாகவும், அற்ப வார்த்தைக்கும் கோபங்கொள்ளாதவனாகவும் கோபமற்றவனாகவும், கடுங்கோபமற்றவனாகவும், தூர்த்தகுணமற்றவனாகவும் ஒரு பிறப்பில் இருப்பனேல் அவன் மறுபிறப்பில் லட்சணமுடையவனாகப் பிறந்து வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் தனக்குக் கிடைக்கிற சுகம் பிறருக்குப் போகுமென்னும் பயமும், பொறாமெயுள்ளவனாகவும், ஏனைய சகோதிரர்கள் அடையும் பலனையும் கீர்த்தியையும் பற்றி அழுக்காருடையவனாகவும், ஏனைய சகோதிரர்கள் பெறும்பட்டம் பூசனை வழிபாடுகளைப்பற்றி பொறாமெய் அடைந்தவனாகவும், பெருமெய் அடைந்தவர்களை தூஷித்து பயமுறுத்துபவனாகவும், ஒரு பிறப்பில் இருப்பனேல் அவன் மறுபிறப்பில் யாவராலும் மதிக்கப்படாது ஈனஸ்திதியுடையவனாயும் வாழ்க்கையில் நற்கீர்த்தி பெற ஏதுவின்றி மாள்வன். இவ்வுலகில் ஒருவன் தனக்குக் கிடைக்கிற சுகம் பிறருக்குப் போகுமாறும், அன்புடையவனாகவும், பொறாமெயற்றவனாகவும் ஏனைய சகோதிரர்கள் அடையும் பலனையும், கீர்த்தியையும்பற்றி தானும் அவர் களுடன் கூடி ஆனந்திப்பவனாகவும், ஏனைய சகோதிரர்கள் பெறும்பட்டம், பூசனை வழிபாடுகளைப்பற்றி தானும் அவர்களுடன் கலந்து சந்தோஷப் படுபவனாகவும், பெருமெயடைந்தவர்களை புகழ்ந்து ஆசி கூறுபவனாகவும், ஒரு பிறப்பில் இருப்பனேல் அவன் மறுபிறப்பில் பேர்பெற்றவனாகவும், அதிகாரஸ்தனாகவும் பிறந்து வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் பூஜிக்கத்தகுந்தவர்களை பூஜியாமலும், உயர்ந்தஸ்தானம் அடையும் பாத்தியதை உடையார்க்கு ஸ்தானமளிக்காமலும், கீர்த்திபெற சக்த்தியுள்ளவர்களுக்கு கீர்த்தி அளிக்காமலும், போற்றி கெளரவப் படுத்தத் தக்கவர்களுக்கு கௌரவம் செய்யாதும், பெறுமெயடைபவரை பெருமெய் பாராட்டாதும், வணங்கத்தக்கவர்களை வணங்காமலும், மதிக்கத் தகுந்தவர்களை மதிக்காமலும், ஒரு பிறப்பில் இருப்பனேல் அவன் மறுபிறப்பில் தாழ்ந்த ஸ்திதியில் பிறந்து கீழ்மகனென்றும் அறிவிலியாக வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் பூஜிக்கத்தகுந்தவர்களை பூஜித்தும், உயர்ந்த ஸ்தானம் அடையும் பாத்தியதை உடையார்க்கு ஸ்தானமளித்தும், கீர்த்திப்பெற சக்தியுள்ளோர்க்கு கீர்த்தி அளித்தும், போற்றி கௌரவப்படுத்தப்பட்டவர்க்கு கௌரவம் செய்தும், பெறுமெய் உடையோரை பெறுமெய்ப்படுத்தியும், வணங்கத் தக்கவர்களை வணங்கியும், மதிக்கத்தகுந்தவர்களை மதித்தும் இவ்விதமாக ஒரு பிறப்பில் நடந்துவருவனேல் அவன் மறுபிறப்பில் சிரேஷ்டஸ்திதியில் பிறந்து மேன்மகனென்னும் அறிவுள்ளவனாக வாழ்வான்.

இவ்வுலகில் ஒருவன் துறவிகளைக்காணில் அவர்களை அவமதித்தும் எழியோர்களைப்பற்றி மனதிலும் சிந்திக்காதும், திக்கற்றவர்களைப்பற்றி நோக்காமலும், ஜீவர்கள் மேல் அன்பற்றவனுமாகி ஒரு பிறப்பில் இருப்பனேல்