பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



இரண்டாம் இரவு

நிலவே!
விண் மண்ணைப் போர்த்துகின்றது !
மண் என்னைப் போர்த்துகின்றது!
நான் யாரைப் போர்த்துகின்றேன்?
நேற்று இந்தக் கேள்வியை வானத்துக்கு விடுத்தேன்!
வான் வளைந்து படுத்துக் கொண்டு தண்டால் எடுக்கின்றது!
இன்று, நீ பதில் கூற வேண்டும் - நிலாவே?
உனது முகம் இன்று வளர்ந்திருக்கின்றது.
முகம் வளருமா?
சிலருக்கு முகம் தேயும்போது, உனக்கு ஏன் வளரக் கூடாது?
அல்லது, திருக்குறளார் எழுதிய பல முகங்களா?
அது பெரிய இடத்து விஷயம்! அய்யன் திருவள்ளுவனிடத்திலே ஞானம் தெரிந்தவர்கள்தான் முகத்தை வகைபடுத்த முடியும்!
ஆனால், நான் உன்னிடத்திலேயே கேள்வியைக் கேட்கின்றேன்.
நேற்று ஏன் குறைந்தாய்?
இன்று ஏன் வளர்கின்றாய்?
நேற்று குறைந்தது
இன்று வளருமானால்,
நேற்று இறந்தது - இன்று
வளர்ந்திருக்க வேண்டுமே !
நேற்று இறந்த மனிதன் - புழுக்களால் குறைந்து போகின்றான்.
புழுக்கத்தால் உருகிப் போகின்றான்!

110