பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



சந்தன பேழையுள்
மூன்று வரிகள்

மாமன்னன் ஹூமாயூன், மொகாலயப் பேரரசிலே அறிவு வேட்டைக்காக அலை பாய்ந்த தஞ்சை சரபோஜி மன்னன்.

சரஸ்வதி மஹாலைப் போன்ற ஒரு நூலகத்தை ஆக்ராவிலே நிறுவியவன்.

ஒருநாள் ஓர் அராபிய மன்னரது வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தான்.

அவன் வாசித்தது என்ன? படியுங்கள்.

"உலகில் உள்ள நாடுகளில் ஆங்காங்கு நடை பெற்ற, சம்பவங்களைக் காலவாரியாகத் தொகுக்குமாறு அராபிய மன்னன் ஒருவன் ஓர் உத்தரவிட்டானாம்.

ஒவ்வொரு நாடுகளிலேயும் நடமாடிய மக்கள், எப்படி வாழ்ந்தார்கள்? இப்போது அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

எதெதற்காக அவர்கள் போர் செய்தார்கள்? ஏன் போரிட்டார்கள்? முடிவுகள் என்னென்ன?

அந்தந்த நாடுகளின் கலை, பண்பாடு, நாகரிகங்கள் காலப்போக்கிற்கு ஏற்ப எவ்வாறு வளர்ச்சியுற்றன?

இவற்றையெல்லாம் உடனடியாகத் திரட்டித்தர வேண்டும். ஐந்தாண்டுகள் அதற்குக் காலக் கெடு. தவறினால், மரண தண்டனை என்று தனது அமைச்சர்களுக்கும் - அரசவை அறிஞர்களுக்கும் ஆணையிட்டானாம் அந்த அராபி அரசன்.

எழுத்துலக வரலாற்றிலேயே, இன்று வரை, இத்தகையதொரு பரபரப்பூட்டும் எந்த சம்பவமும் - எங்கும் நடை பெற்றதாகத் தெரியவில்லையே!

அரசு அலுவலர்கள் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டபடியே மனம் கலங்கி நின்றார்கள்.

வேந்தன் கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது என்று பல இரவுகளும், பகல்களும் மனம் நொந்து அலைமோதி,

130