பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


கூசுகின்ற கீழ்நிலைகள் இருக்கு மானால்
கோணவினை நிமிர்த்தாமல் விடுதல் தீது!
நீசநிலை நெருக்கடியில் நெருங்கிச் சாகும்
நிலத்திற்கு விடிவெள்ளி தேவை யன்றோ?
ஆசைநோய் குடிகொண்ட நெஞ்சை நாட்டில்
ஆற்றுகின்ற மருந்தின் பேர் சீர்தி ருத்தம்!


சீர்த்திருத்தம் வார்த்தையல்ல உயிரோட் டத்தால்
சீறிவரும் செயலின்பேர் கருத்தைச் சொல்ல
யார்வேண்டு மானாலும் வருவர்! ஆனால்,
கடனாற்ற யார்வருவர்? இதுதான் கேள்வி!
நீரெதிர்க்கும் புயலைப்போல் இருந்தால் தானே
நேற்றிருந்த கொள்கைகளை இன்று வீழ்த்தும்!
கார்பொத்தல் ஆக்குகின்ற மின்ன லைப்போல்
கடனாற்ற வந்தவர்தான் இயேசு அண்ணல்!

வேசியினைப் பாவியென்று குற்றஞ் சாட்டி
வீசவந்தார் கல்லாலே! அதனைக் கண்டு
இயேகமனம் புழுங்கிற்று!கூட்டத் தாரை
ஏறெடுத்துப் பார்த்துஒரு கேள்வி கேட்டார்.
"வேசியினைப் பாவியெனும் உங்களுக்குள்
விதிவிலக்காய் இதுவரையில் பாவம் செய்யா
மாசற்றோர் முதற்கல்லை எறிக” என்றார்.
மனமாற்றும் சீர்த்திருத்தம் இதுதான் அன்றோ!

மீன்பிடிக்கும் பேதுருவைக் கடலோ ரத்தில்
தேவசுதன் வலைவீசக் கண்டார்! நீங்கள்
நான்செல்லும் பாதையிலே வருவீ ரானால்
மனிதரினைப் பிடிப்போராய் செய்வேன் என்றார்.
தேன்மோழிகள் தித்திப்பைத் தருவ தோடு
திசைதிரும்பிப் போகாது! உடனே நெஞ்சக்
கூன்நிமிர்த்தும் ஆற்றலோடு வேலை செய்யும்
குனியாத சீர்திருத்தம் இதுதான் என்பேன்

181