பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி



ஆனால், காந்தியடிகளின் தத்துவங்கள்-இந்த நூற்றாண்டில் எத்தனை உள்ளனவோ- அத்தனை ஆண்டுகளிலும் காற்றோட்டமான ஒரு மாளிகையாகவே இன்றும் இருக்கின்றது.

அந்த விடுதலைப் போராட்ட தத்துவ மண்டபத்தில், சில இடங்கள்-அவரவர் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப, சிலருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஆனால், சுதந்திரவாயில், எந்த நாட்டுக்கும்-யார் வந்தாலும் திறந்தே காத்துக் கொண்டிருக்கும் சங்கப்பலகையொத்ததாகும்!

காந்தியடிகள் என்பவர் யார்?

கேள்விக் குறியாக விளங்கிய

அந்தச் சத்திய மனிதர்,

இப்போது பிறக்கின்ற குழந்தைகளுக்குப்

போதனையாகவும் -

பிறக்காதவனுக்கு வேதனையாகவும்

வாழ்பவனுக்குச் சாதனையாகவும்- இருக்கின்றார்!

கடந்த தலைமுறையில் தலைவர்களைப் பயிரிட்டவர் -

தற்காலத் தலைமுறையில் விதைகளுக்காக விடப்பட்டவர்-

அடுத்த தலைமுறைக்கு யாரும் கேட்காமலேயே

முளைக்கக் கூடியவர் காந்தியடிகள்!

இந்திய நாடு - அவரை இப்போது பார்த்தது -

சாக்காடு பிறகு பார்த்தது -

மனித உரிமை என்ற கொள்கை நாடு,

எப்போதும் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது!

அவர் சிந்தித்து தீண்டிய ஒவ்வொன்றும்

துலங்காமல் போனதில்லை.

அன்பால் முகம் பார்த்தார் -

அகிம்சையால் அகம் பார்த்தார் -

61