பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


காலையிலே கதிர் முளைக்கத் தவறி விட்டால்,
கனல் போர்த்திக் கிடக்கும் கவிதை ஒன்றைப்
பாவேந்தர் கட்டளையிட்டால் -
அது ககன பவனி வந்தால் - போதாதா?
கடும் கோடையைக் கொட்டிட !

கோல நிலா கொஞ்சம் காலம் கடந்து
வருவதாகத் தகவல் கிடைத்தால்,
சந்தனத்துச் சந்தத்தால் -
சந்திரனை உருவாக்கி
நிலா வருகின்ற வரையில்
நீ, நின்று - சந்தன ஒளி தா! என்று,
அம்புலிக்கே ஆணையிட்ட
கவிஞன் பாரதிதாசன் !

மேகம் முரண்பட்டு,
முத்து இறைத்தன போல்
கொட்டிக் கிடக்கும் மீன்கள்,
குறு விழி தன்னை மறைக்குமானால்,
பாவேந்தர்- தனது எழுத்துக்களை
வாரி வாரி இறைத்து, அவற்றை
விண் மீன்களாய் எரிய வைப்பார்.

விடியல், சற்றுக் களைப்பால் விழி மூடி,
தூக்கக் கலக்கத்தில் துவண்டு தூங்கி விட்டால்,
மேதினியின், மேன்மையான
காலைக் கபாடத்தைத் திறப்பது யார்?

நித்திரைச் சுகத்தில் - மோன உலகம் - சற்றே
நிம்மதியாகக் கிடக்குமானால்,
சத்தான காரியங்கள்
சமயத்தில் நடக்காதே - என்றஞ்சி,
வைகறை வரத் தவறுகின்ற
நேரத்திலே எல்லாம்,
கை-கறையுடைந்த தனது கவிதையால்
பாரைத் தட்டி எழுப்பும் திறனும் - உரனும்
பாவேந்தர் கவிதைக்கு இருந்ததை
பல நிகழ்வுகளிலே பார்த்திருக்கின்றோமே !

70