பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பாவேந்தர் கவிதையிலே -
இலக்கணப் பிழைகள் உள்ளன
என்று, அழுக்காற்றுப் பிறவிகள் சில,
புறம் பேசித் திரிந்தன.
எதிரிகள் விரித்த, அந்த வஞ்சக
இலக்கண வியூகச் சூதுக் களத்தை
பாரதிதாசன் கண்டார்.

இலக்கணப் பாசறை குவிந்த
கருவிகளாய் எழுச்சி பெற்றார்!
காய்வரும் இடத்தைக் கவிதையில் காட்டி,
கனிவரும் அசைக் கிளைகளைச் சுட்டி,
குற்றியலுகரம் புணரும் இடங்களில்
ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
இசையால் ஏற்பட்ட இன்னலல்ல
என்று கடாவி, விளக்கம் தந்தார்! -
வீழ்ந்தனர் விரோதிகள் -

மோனை முத்திரைகள் இல்லையே -
என்று மோதியவர்களின்
முகத்திலறைந்தாற்போல!
'காரிகை உமிழுமாறு
பெரும் புலவன் கபிலர் காட்டிய
கைவரிசைகளை
வேல்களாக்கி வீசிச்
சாய்த்தார் - சழக்கத்தை !

இலக்கணப் பாதையில் வழுக்கி விழாமல்,
எப்போதும் - எச்சரிக்கையோடும், விழிப்போடும்
எழுதும் முதிர்ந்த கவிஞரை, புரட்சி வித்தகரை
வேண்டுமென்றே குறை கூற முற்பட்டார்கள் - சிலர்!
காரணம், அவர் பெரியார் பாதையிலே நடந்து,
ஆதிக்கத்தை ஆணி வேரறச் சாய்க்கின்றாரே என்ற காழ்ப்பு!
அதனால்தான், அவர் கவிதையை எடுத்துக் கொண்டு,
இச்சொல் எதற்கு? அச்சொல் ஏனில்லை?
சமத்கிருதம் வருகின்ற நேரத்தில்
தற்பவம் தேவையா?”

71