பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


எந்த அணங்கையும், மன்னன் காமக் கருவியாக்கிக்கொள் வதில்லை, வெறும் பொழுது போக்கு!

கணவனிருந்தும் விதவையாக இருந்த ஆன், தன் அழகையும் இளமையையும் வெறுத்தபடி, ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள்.

சுழல் கண்ணழகியும், கீத மொழியினளும், மன்னனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருப்பதும், ஆன் அரசியை மன்னன் அனியாயமாக ஒதுக்கி வைத்திருப்பதும் ரிஷ்லுவுக்குத் தெரியும்; தெரிந்து? அந்த நிலை நல்லது தான் என்று எண்ணிக்கொண்டாள். ஆன் அரசியுடன் காதல் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தால்! மன்னன் அவள் வசமாகி விட்டால் தன் நிலைக்கு என்ன ஆபத்து நேரிடுமோ, யார் கண்டார்கள்! ஆன் அரசி, மேரி போலாகி விட்டால்? ஆன் அரசிக்கு வேண்டியவர்களுக்கு ஆட்சிப் பொறுப்புத் தரப்பட்டு விட்டால்? இப்படி எல்லாம் எண்ணிய ரிஷ்லு, மன்னனின் மண வாழ்க்கை மலருவது கூடாது என்று விரும்பினான்.

கணவன் மனைவிக்கு இடையே கலகமூட்டி, பிரித்து வைத்துப் பெருங்கேடு செய்கிறான் ஆதிக்க வெறியன் என்று சிலர் குற்றமே சாட்டினார்கள்.

அணங்குகளுடன் கொஞ்சிக் குலவட்டும், மனதுக்கு மகிழ்ச்சி தேடிக்கொள்ளட்டும், ஆனால் எந்த மைவிழியாளிடமும் மன்னன் மனதைப் பறிகொடுத்து விடக்கூடாது என்பது ரிஷ்லுவின் எண்ணம். மனதுக்கு மகிழ்ச்சியே கிடைக்கா விட்டால் மன்னன், காரணமற்ற கோபம், சலிப்பு, சோகம் ஆகியவைகளுக்கு ஆட்பட்டு விடுவான்--அதுவும் தொல்லையாகி விடும், ஒருவேளை, பொழுது போக்கே இல்லாத நிலையில் ஆட்சிக் காரியங்களையே கவனிக்கத் தொடங்கிவிடக் கூடும்--அது தொல்லை மட்டுமல்ல, ஆபத்துங்கூட! எனவே மன்னன், ஆடிப்பாடி மகிழ வேண்டும், அதற்குஏற்ற அழகு மங்கையர் அவன் அருகில் இருக்க வேண்டும்--இந்த ஏற்பாடும் ரிஷ்லு கவனித்துக் கொள்ள வேண்டும், வேறு எவனாவது இந்தத் துறையில் ஈடுபட்டு, மன்னனின் தோழமையைப் பெற்று விடுவதும், பேராபத்தாகு மல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/65&oldid=1549047" இலிருந்து மீள்விக்கப்பட்டது