பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/26



உரத்த குரல் ஒன்று கேட்டது. ஒலிவந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தேன்; பாவேந்தரின் ஆணை என்பதை உணர்ந்தேன். அதன்படி முன்பைவிடத் தைரியமாகத் தங்கு தடையின்றி விடையிறுத்தேன். முடிவில், அத்தேர்வில் வெற்றிபெற்றேன். என்னோடு கவியரசரிடம் தமிழ்பயின்ற மற்ற மாணவர்களும் வெற்றிபெற்றனர். தம் மாணவர் அனைவரும் வெற்றி பெற்றதால் கவியரசருக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.

துரைசாமி வாத்தியார் நல்ல தமிழறிஞர் ‘கண்ணப்பர் கலம்பகம்’ போன்ற ஆத்திக நூல்களை எழுதியவர். அவர் மறைந்தபோது பகையென்றுபாராது ஓடோடி வந்து, என்றுமே கலங்காத கவியரசர் கண் கலங்கி நின்றார். “துரைசாமி மறைந்தான். ஆம்; அவன் எனக்குப் பகைவன்தான். அவன் தமிழறிவைப் பாராட்டுகிறேன். தமிழ் என் உயிர்! தமிழைப் பாராட்டப் போகிறேன்’’ என்று புதுவையில் ஒருதனிக் கூட்டம் ஏற்பாடு செய்து பகைவராகிய பண்டிதர் துரைசாமி முதலியாரை இரண்டு மணி நேரம் பொதுமக்கள் முன்னிலையில் வாயாரப் பாராட்டி அஞ்சலி செய்த பெருந்தன்மை பாரதிதாசனை விட வேறு எவருக்கும் இருந்திருக்கவில்லை; இனிஇருக்கவும் முடியாது!

துரைசாமி வாத்தியார் மாணவர்குழுவில் குறிப்பிடத்தக்கவர் இலக்கணச் செம்மல், வித்துவான் குமாரசாமி செட்டியார் ஆவார். இவர் நல்ல தமிழ் இலக்கண இலக்கிய அறிஞர். இவரும் கவியரசரைப் போலவே அரசாங்கப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணிபுரிந்து அண்மையில் ஒய்வு பெற்றவர்.[1] இவரிடம் பயின்ற மாணவர்கள், இவருக்குப் பொன்னாடை போர்த்த வேண்டும் என ஏற்பாடுசெய்து, கவியரசரிடம் கருத்தைத் தெரிவித்தனர். கவியரசர் மனமுவந்து, தம் பகைவரின் மாணாக்கன் என்பதை உணர்ந்தும் முன்வந்து, சென்னை முத-


  1. *இக்கட்டுரை 1964 மேத்திங்களில் எழுதப்பட்டது.