பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள்மொட்டுகள்மலர்கள்/70




கும் என் தாயாரை விளித்து, “பழனியம்மா! குடும்ப விளக்கு வருது’’ என்று கூறுவார். என் கணவர் புதுவைக்கு வரும்போதெல்லாம் என் தந்தையாரே கடைக்குச் சென்று மீன் வாங்கிக்கொண்டு வருவார்.

என் தலைப்பிள்ளையான புகழேந்தி புதுவையில் பிறந்த போது பிரெஞ்சுநாட்டிலிருந்து இறக்குமதியான சாக்லெட்டைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் குத்துக் குத்தாக வாரிவழங்கினார். பேரன் புகழேந்தி மீது அவருக்கு அளவுகடந்த விருப்பம். தமக்கு உடம்பு சரியில்லையென்றால் தந்தி கொடுப்பார். நான் குழந்தையோடு புறப்பட்டுச் செல்வேன். புகழேந்தியைப் பார்த்ததும் அவருக்கு உடம்பு குணமாகிவிடும்.

என் தந்தையாருக்கு உள்ளமும் நாக்கும் ஒன்றுதான். உள்ளத்தில் என்ன நினைக்கிறாரோ அதை எதிர்ப்புகளுக்கஞ்சாமல், பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசிவிடுவார்; எழுதிவிடுவார். அதனால் அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும் அவருக்கு எதிரிகள் அதிகம். எதிர்ப்பு அதிகம் ஆக ஆக அவருக்குச் சுறுசுறுப்பு அதிகமாகுமே தவிர சோர்வு ஏற்படாது. அவர் எந்தநிலையிலும் அச்சப்பட்டு நான் பார்த்ததில்லை. இந்தப் பண்புகளால் அவருக்கு ஏற்பட்ட தொல்லைகள் ஏராளம். கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே இவரை அடிக்கடி இடம் மாற்றிக் கொண்டிருப்பார்கள். காரைக்கால், நிரவி, கூனிச்சம்பட்டு, நெட்டப்பாக்கம், முதலியார்ப்பேட்டை ஆகிய வெளியூர்களுக்கும், புதுவையில் கல்வே கல்லூரி முதல் மற்ற முத்திரைப்பாளையம், உருளையன்பேட்டைப் பள்ளிகளுக்கும் அவரைப் பந்தாடிக் கொண்டிருப்பார்கள்.

அதற்காக என்தந்தையார் கலங்க மாட்டார்; தம் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்கமாட்டார்.

கல்லூரி வகுப்புகளுக்குப் பாடம் பயிற்றுவிக்கத்தக்க பெரும்புலமையும் ஆற்றலும் பெற்றிருந்தாலும் சிறுவர்-