பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறநிலையங்கள்

ஆயிரக்கணக்கில் ரூபாயைச் செலவுசெய்து, பலன் கிடைக்காமல் அடிவயிறு எரிகிறதே! என்று சொல்வது நாமல்லவே!

நாங்கள் கடவுளிடத்தில் அன்பைச் செலுத்து கிறோம். அவர், எங்களுக்கு அறிவையும், அருளையும் கொடுக்கிறார். நாங்கள் நாஸ்திகர்கள் என்று, எங்களிடத்தில் விரோதமும், பகையும் இருக்குமானால், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே எங்கள் மண்டை பிளக்க என்று சாபமிடலாமே! அல்லது பேச முடியாமல், நாக்கு உள்ளே இழுத்துக்கொள்ளக்கடவது என்று சொன்னால் இழுத்துக்கொள்ளுமே! கைகால்கள் பிடித்துக் கொள்க, என்று சொன்னால் பிடித்துக் கொள்ளுமே! சுலபமான வழிதான். ஆனால், எங்கேயாகிலும், இந்தக்காலத்தில் இப்படி நடக்கிறதா? நடக்க முடியுமா? முடியாது.

தன்னுடைய ஜட்காவண்டியிலேயே பிரயாணம் செய்யவேண்டுமென்று விரும்பும் ஜட்கா வண்டிக்காரன், நாம் பள்ளில் ஏறப்போவதைப் பார்த்து, "இந்தப் பஸ்ஸிலா ஏறப்போகிறீர்கள்? அடிக்கடி சக்கரம் பங்சராய்ப் போய்விடுமே! சீக்கிரம் போய்ச் சேராதே! அந்த பள்ஸை நம்பி ஏமாறாதீர்கள்! இதோ, ஜட்காவண்டி! நொடிப்பொழுதில் போய்விடும்” என்றுதான் சொல்வான். அதே ஜட்காவண்டிக்காரன், அவசர அலுவலாக எங்கேயாகிலும் செல்ல வேண்டியிருந்தால், அவன் சொன்ன, அதே பஸ்ஸில்தான் பிரயாணம் செய்வான். அதை போலத்தான் புதிய புதிய மாறுதல்களும் நடக்கின்றன.

மக்கள் வாழ, நல்லதொரு திட்டம் தேளவ. பணம் எல்லா இடங்களிலும் பரவினால்தான் வியாபாரம்