பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாதுரை

19

இன்னும் C.I. D. க்கள் வேறு. இதுமட்டுமா? இதைப் பார்வையிட ஒரு மந்திரி - இவையெல்லாம் பஞ்சம் மிகுந்த இந்த நாட்டில் தேவைப்படுகின்றன. மாதா கோயிலிலே நாலு பக்கமும் வாசற்படி; காவல் ஏதாகிலும் வைத்திருக்கிறார்களா? முஸ்லிம்களின் மசூதிகளிலும், நாலு பக்கமும் வாசற்படி; வெட்டவெளி; ஏதாகிலும் காவல், அங்கே தேவைப்படுகிறதா? இல்லையே.

காஞ்சிபுரம் கருடசேவைக்குப் போலீஸ் பந்தோபஸ்துக்காகப் போலீஸ்காரர்கள், எங்கெங்கிருந்து வருகிறார்கள் தெரியுமா? கோதாவிரி ஜில்லாவிலிருந்தும், மற்ற ஜில்லாக்களிலிருந்தும், போலீஸ் வரவேண்டியிருக்கிறது. விழாவுக்குப் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். 18 திருப்பதிகளிலிருந்தும் கருடசேவையைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.

சில பக்தர்கள், கத்தரிக்கோலின் கூர்மையைக் காண வருகிறார்கள். மக்களின் கழுத்திலிருக்கும் நகைகளைப் போலீஸ்காரர்களையும் ஏமாற்றிவிட்டுக் கத்தரித்துக் கொண்டு, சந்தடி செய்யாமல் நழுவிவிடுகின்றனர். காஞ்சி வரதராஜர் பெயரால், ஏதாகிலும் கைத்தொழில் கற்பிக்கப்படுகிறதா? இல்லை! ஏதாகிலும் பள்ளிக் கூடங்கள் நடத்துகிறார்களா? இல்லை!

வரதராஜர் ஏழைகள் விடுதி, என்று என் அந்தக் கோயில் தர்மகர்த்தர்கள், வருடந்தோறும் கோயிலுக்கு வரும் பணத்தைக்கொண்டு நடத்தக்கூடாது?

தீராதவினையெல்லாம் தீர்க்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் பெயரால், திருப்பதியில், இப்பொழுது ஒரு கல்லூரி நடைபெறவில்லையா?