பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அறநிலையங்கள்

மக்களிடையே மதிப்பை இழந்து, மாண்பை இழந்து, கருணையை இழந்து இருக்கும் சோற்றுத் துருத்திகளால் காட்டுக்கு ஏதாகிலும் பயன் உண்டா? முன்பெல்லாம் மடாதிபதிகளைப்பற்றிப் பேசினால், ஒரு விநாடியிலே கருவறுத்துத் தள்ளிவிடுவார்கள். அது அந்தக்காலத்தில். இன்று, எல்லாக் கட்சியாரும், மடாதிபதிகளின் போக்கைக் கண்டிக்கிறார்கள். இந்து அறநிலையப் பாதுகாப்பு மசோதாவை, எல்லாக் கட்சியாரும் ஆதரிக்கிறார்கள்.

எது பாபம்? எது புண்ணியம்? என்பதை நன்கு ஆராய்ந்து, அறிவுத்தெளிவு கொண்டு, நீங்கள் வாழ வேண்டுமென்று சொல்லி, இதோடு முடித்துக்கொள்கிறேன்.