பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அறநிலையங்கள்

வைதிக வைத்தியநாத அய்யரும், வரதாச்சாரியும் இந்துமத அறநிலையப் பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கின்றார்கள். வரதாச்சாரியும், வைத்தியநாத அய்யரும் இதற்குப் பரம்பரை வைரிகள். காங்கிரஸ்காரர்கள் கொண்டுவரும் இந்த மசோதாவை, சில காங்கிரஸ்காரர்களே சட்டசபையிலே எதிர்க்கிறார்கள். காங்கிரஸ்காரர்களால் சிறையில் பிடித்துத் தள்ளப்படும் நாம் இதற்கு ஆதரவு தருகிறோம். நாம் இதற்கு ஆதரவு தருவதற்குக் காரணம், நமக்குள்ள சமநோக்கு வரதாச்சாரியும். வைத்தியநாத ஐயரும் எதிர்ப்பது, வைதிகப் பித்தால்; கபிடம் அந்தக் கயமைத்தனப் பித்து இல்லை. ஆகவே யாம் ஆதரவு தருகிறோம். காங்கிரஸ்காரர்கள் நம்மை அழைத்தாலும் அரைக்காமற்போனாலும், நாம் இதற்கு ஆதரவு தருகிறோம்.

நாம் எதிர்ப்பது எதை? பார்ப்பனர் புரட்டை, அவர்கள் ஆதிக்கத்தை, பார்ப்பனீயத்தை, அவர்கள் பகை மூட்டிவிடும் பான்மையைத்தான் எதிர்க்கிறோம். திராவிடக் கழகத்தாராகிய நாங்கள் ஆரம்பத்திலிருந்து கண்டித்து வருவது பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனர்களிடையே குடியேறி இருக்கும் பார்ப்பனீயத்தையே. இன்றைய பார்ப்பனீயம் மடாதிபதிகளை ஆதரிக்கின்றது. நாம் சாட்டும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்பனியம் மழுப்பி மறைக்க முயல்கிறது. இந்த மடாதிபதிகள் எல்லோரும் பார்ப்பனர்கள் அல்லர். ஆனால், மடாதிபதிகளின் தொடர்பால் பார்ப்பனீயம் வாழ்கிறது. தர்மபுரி ஆதீனத்து மடாதிபதி பார்ப்பனர் அல்லர். திருவாவடுதுறை ஆதீனத்து மடாதிபதியும் பார்ப்பனர் அல்லர். இவர்கள் பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தால், இவர்களை நாங்கள் போற்றவில்லை. இந்த மடாதிபதிகள் பார்ப்பன