நறுந்தொகை பாடிய நாவலர்
49
அதிவீரராமர் தம்மிடம் பரிசு பெறுவதற்கு வரும் புலவர்களைப் பலவாறு சோதிப்பார். தக்க விடையளிக்க முடியாது தத்தளிக்கும் தமிழ்ப்புலவர் மண்டையில் ஓங்கிக் குட்டுவார். ‘நிறைந்த புலமை பெற்றுச் சிறந்த கவிதை பாடுக’ என்று அறிவுரை கூறி அனுப்புவார். ஆதலின் ‘குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை’ என்னும் பழமொழி வழங்கி வருகின்றது.
நிடத நாட்டை ஆண்ட மன்னன் நளன் என்பவன். அவனுடைய வரலாற்றை வட மொழியில் ஹர்ஷகவி என்பார் காவியமாகப் பாடியுள்ளார். அந்நூல் ‘நைஷதம்’ எனப்படும். அதனையே அதிவீரராமர் தமிழில் ‘நைடதம்’ என்று மொழிபெயர்த்துப் பாடினார். அவர் தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளிலும் பெரும்புலமை உடையவர். ஆதலின் வடமொழிக் காவியத்தின் சுவை குன்றாது தமிழில் பாடியுள்ளார். அந்நூலின் பெருமையை அறிந்த புலவர்கள் ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்று போற்றினர். புலவர்களின் அறியாமை
அ.த.அ.—4