பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அறப்போர்


அமைச்சர், இந்த ஆகாத திட்டத்தைப் புகுத்துகிறார்--அறப்போருக்குத் தமிழரை அழைக்கிறார்.

தமிழர், அவினாசியாரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கப்போவதில்லை! தமிழர் அறப்போர் புரிய, என்றுமே தயங்கினதில்லை--சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்தே, தமிழர் தயங்கினதில்லை, தமது மொழிக்காகப் போரிட. தமிழர், தமது மொழி மூலம் கிடைக்கும் வாழ்க்கை வழியின் மேம்பாட்டினை நன்கு அறிவர்-- எனவே தான், அந்த மொழிக்கு இழுக்கு வருகிறதென்று தெரிந்தால், கூட்டினை விட்டு வெளிக் கிளம்பும் சிங்கங்களாகின்றனர். இம்முறையும் சரி, அறப்போர் புரியத் தமிழர் அஞ்சப்போவதில்லை. அந்த நாளில் தமிழருக்கும், தமிழ் மொழியைக் குலைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இருந்த நிலையும், இன்றுள்ள நிலையும் தமிழர் நன்கு அறிவர். அன்றும் ஆட்சிபீடத்தில் நாம் இல்லை.

இன்றும் ஆட்சிப்பீடத்தில் நாம் இல்லை.

அன்று, தமிழ்மொழிக்குப் படை திரட்டி, வெற்றி காண அறப்போர் தொடுத்தோம்.

இன்றும் தொடுப்போம்! தமிழரின் உள்ளம் பண்பட்டுள்ள இப்போது, அறப்போர் முன்பிருந்ததைவிட, மும்முரமானதாக இருக்கும். தமிழரின் வீர வரலாற்றுச் சுவடியில், மேலும் சில இதழ்கள் சேர்ப்போம்--பொன் எழுத்துக்கள் பொறித்திட சீமானுமல்ல, பூமானுமல்ல நாம் செங்குருதியால் எழுதிக் காட்டுவோம். செந்தமிழைக் காத்திட அறப்போர் நடாத்தும் செய்தியை. அவினாசியாருக்குக் கூறுகிறோம், உமது அறைகூவல் ஏற்றுக்கொள்ளப்படும்--அறப்-