பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அறப்போர்



போராட்டத்தில் கலந்துகொள்ளப் பிரியமில்லாதவர்கள் தயவுசெய்து எட்டியிருந்து அமைதியாக நடப்பதைப் பாருங்கள் என்றுதான் வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறோம்.

சென்ற போராட்டத்தின்போது நாம் ஹிந்து தியாலாஜிகல் கலாசாலை முன்னிலையில் மறியல் செய்தபோது அப்பள்ளித் தலைமை ஆசிரியரும், இதர பார்ப்பனர்களும் இந்தப் பள்ளி, பார்ப்பனர்களால் நடத்தப்படுவதால் பார்ப்பனரல்லாதாராகிய இவர்கள் இங்கு வந்து மறியல் செய்கிறார்கள்" என்று கூப்பாடு போட்டார்கள். அந்தக் கூப்பாட்டுக்கும் இன்று இடமில்லாதவகையில் திராவிடர்களால் நடத்தப்பட்டு, பெரும்பாலும் திராவிட மாணவர்களையே கொண்டு நடத்தப்பட்டுவரும் தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியின் முன் மறியல் ஆரம்பமானது; மறியல் அமைதியாக நடக்கிறது. பொது மக்களும் மிக அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்று இரண்டு இராமசாமிகளும் அறிக்கை விட்டுள்ளார்கள். இரண்டு ராமசாமிகளில் ஒருவர் போராட்டத்தைத் தலைமை வகித்து நடத்துகிறார். ஒருவர் அப்போராட்டத்தைத் தடுத்து ஒழிக்கவேண்டிய நிலையில் உள்ளார்.

இரு இராமசாமிகள் !

பெரியார் ராமசாமி, திராவிட கலாசாரம் அழியாமலிருக்க, திராவிட நாட்டில் ஆரிய கலாசாரம் பரவாமல் இருக்க ஹிந்தி எதிர்ப்புப் போரைத் துவக்கியிருக்கிறார். ரெட்டியார் ராமசாமி, ஆரிய கலாசாரத்தைக் காப்பாற்ற, ஆரிய எஜமானர்களுக்கு அடிபணிந்து தம் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டி அடக்கு முறையைக் கையாளவேண்டிய நிலையில் உள்ளார்.