பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அறப்போர்



மாணவர்களும் ஒரு சிறிதும் துன்பத்திற்கு உள்ளாக்கப் படமாட்டார்கள். மறியலுக்குச் செல்லும் தொண்டர்கள் முதலில் தம் வணக்கத்தைத் தெரிவித்துக் பிறகு சொல்வார்கள் பணிவாக, "ஹிந்தி வகுப்புக்குச் செல்லாதீர்கள்! ஹிந்தி கற்காதீர்கள்! ஹிந்தி உங்களுக்குத் தேவையில்லை! இந்நாட்டுக்கும் தேவையில்லை;" என்று.

ஆவேசம் வேண்டாம்

நீங்கள் உணர்ச்சியினால் ஆவேசம் கொண்டுவிடக் கூடாது. அப்போது தோன்றும் உங்கள் உணர்ச்சிகளையெல்லாம் எதிர்காலப் போராட்டத்திற்கான அன்புத்தொகையாக பாங்கியில் சேர்த்துவைக்கவேண்டியதுதான். அங்கு ஆவேசப் பேச்சுக்கு இடம் கொடுத்தால் கலவரம் ஏற்படும். கலவரம் ஏற்பட்டால் எதிர்ப்பு தோல்வியடையும். வீரத் தமிழன் முயற்சி வீணாகும்! அதற்கு இடம் கொடுக்காதீர்கள்!

தொண்டர்களின் மண்டையில் அடி விழுந்தாலும், அடிபட்ட தொண்டர்களைத் தூக்க எத்தனிக்கும் தொண்டன் கரத்தின்மீது அடி விழுந்தாலும், அடிபட்ட மண்டையிலிருந்து பீறிட்டடிக்கும் ரத்தத்தை அடைக்கவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட்டாலும், அடிக்கும் கையை வெட்டிப் பொசுக்கவேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு ஏற்பட்டாலும் நின்ற இடத்தை விட்டு நீங்கள் அசையக்கூடாது! சிந்திக்கவேண்டும்.

எதற்கும் துணிந்த தொண்டர்கள்

'முற்போக்குக் கொள்கைக்காக நமது தோழன் அதோ