102
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
பறவை, மலையின் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது!
பறப்பன ஊர்வன எல்லாம், இப்போது தலை தூக்கிப் பார்த்தன!
பூமியிலிருக்கும் எல்லா தாதுப் பொருட்களும் உயிரினங்கள் அனைத்தும், பூரித்து வெளியில் வந்தன!
இப்போது பறவை, உச்சியின் மீது தத்துவம் கூறும் ஞானியைப் போல, மிக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது!
தன்னுடைய அலகால், இறகுக்கிடையில் இருக்கின்ற தினவைப் போக்கிக் கொண்டது!
சிலிர்த்த இறகுகளை மேல் நோக்கி நிறுத்தி, ஜீவக் காற்றால் - தன் களைப்பைப் போக்கிக் கொண்டது.
கிராமத்து மக்கள் ஒடிவந்தார்கள். தன்னந் தனியனாய், நானும் அமைதியாய், நின்று கொண்டிருக்கும் என்னைச் கழ்ந்து கொண்டார்கள்.
எங்கள் கூத்தையும் - ஆட்டத்தையும் பார்க்காமல், இந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே! இதனால் யாது பயன், என்று கேட்டனர்!
அதோ, அந்தப் பறவையின் வடிவத்தால் - வரவால் -தோற்றத்தால் - எல்லா உயிரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றன!
அந்தப் பறவையின் பொலிவிலே, உங்கள் கண்கள் மயங்கவில்லையானால், அது உங்களுடைய விழிகளது குற்றமென்றேன்!
'அது ஒரு சோம்பல் பிடித்த பறவை' என்று அவர்கள் கூறினார்கள்.
'அது வான் வழியாக வந்த அறிவுத் தூதன், என்று நினைக்கிறாயா?’ என்று என்னைக் கேட்டார்கள்!
எனது எண்சாண் உடம்பும் அப்போது வணக்கத்துடன் - 'ஆம்' என்றது!