70
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
தேர்ந்த அறிவாளன், தென்னவர் மன்னன் பார்க்கும் கற்பனை!
அவர் வழங்கிய அறிவாழமிக்கக் கருத்து மணம்; வாயுதிர்த்த வளமான பேச்சுக் கலை;
இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர்.
அந்த எண்ணச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்;
காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை!
ஞாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்!
பச்சை என்றாலே வளத்தைச் சுட்டும் நிறமன்றோ!
சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியானப் பாதைகளன்றோ அவை:
முற்றும் நீ அறிவாயே! பின் ஏன்; முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்றாய்!
வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துள்ளேன்.
விளங்கி நீ செல்வாய் என்று, முற்றிற்று, கூறிற்று, பச்சை,
மஞ்சள் சாமந்தி:
அஞ்சனந்தோய் விழியுடையாள்; மஞ்சள் நீராடி, அந்தி வேளையிலே
கொஞ்சும் தென்றலோடு; குழையும் கடையினை திருத்தி அமைத்தவாறு;
தளிர்நடை போடுதலொப்ப, செடியின் முடிமீது சிரித்து நின்ற மஞ்சள் சாமந்தி, கேலிச் சிரிப்பு சிரித்தது!
சிரிப்பொலி கேட்டுச் சிலிர்த்து நெருங்கினேன்!
மஞ்சள் சாமந்தியின் கவின்மிகு வண்ணத்தைக் கண்டேன்!
எனக்கு முன்னே எண்ணற்ற மலர்கள் விரவிய அறிவுரை மணங்களை நுகர்ந்தனையோ! என்றது!