52
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
அடேயப்பா, மரத்தின் கதையே இவ்வளவு சிறப்புப் பெற்றதா? மயக்கமாக இருக்கிறது. பூவே, உன் வரலாறு.
அடடே! இதற்குள்ளாகவா மயக்கமடித்து விழப் பார்க்கிறாய்? இன்னும் கேள்.
அந்தக் காடுகளிலே, மலைச் சரிவுகளிலே எத்தனையோ எழிலான மர வகைகள் விளைகின்றன.
அவைகட்கெல்லாம் என் போன்ற அருமையோ பெருமையோ ஏற்பட்டு விடுமா?
வெல்ல நினைத்து வேடிக்கைக் காட்டுகின்ற கழுகுக் கூட்டத்தின் கண்டத்தைக் கத்திரித்தால் எப்படியிருக்கும்?
இதுபோல; எண்ணற்ற எழில் மரங்களிடையே நான்தான் மிகமிக உயரமாக - மிகமிகப் பருமனாகக் காட்சியளிப்பேன்.
எல்லா மரங்களையும் வென்று, வெற்றிக்கொடியை நாட்டி; விண்மூட்ட விளங்கி நிற்பேன்.
எந்த மரமும் எனக்கு நிகராக இருக்க முடியாது - ஏன்? என் பெயர் வேங்கை மரமல்லவா? வேங்கை என்றால் - சாமான்யமான மிருகமா?
வீரத்தின் விளக்கமல்லவா நான்? - அதனால்தான் தோற்றத்திலேயே மற்ற மரங்களை வீழ்த்துகிறேன்.
என்னருகே உள்ள மரங்களெல்லாம், கண்டம் கத்தரிக்கப்பட்ட கழுகுகளைப் போலக் காட்சியளிக்கும்.
எனக்கு மட்டுமேன் அந்தச் சிறப்பு? பெருமை! வீரம்! தோற்றம்! பண்பு!
வீரத்தின் விளைநிலம் தமிழகம்! விவேகத்தின் பிறப்பிடம்! அமைதிக்கு வித்தகம்!
உலகச் சிறப்புக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் - உருவான இடமே தமிழ் நிலம்தானே!
அந்த நிலத்திலே தோன்றிய மரம் நானல்லவா? எனக்குரிய பெயரும் வேங்கைதானே!