பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


தமிழ் மக்கள்; எனது வளர்ச்சிக்கு ஏற்ப; பல பெயரிட்டு அழைக்கின்றனர்.

தமிழிலே சொற்பஞ்சமில்லை என்பதைத்தானே இது தரணிக்குக் காட்டுகிறது என்று நினைக்கிறாயா? அது உண்மைதான்.

'கருங்கால் வேங்கை , பாராரை வேங்கை, நெடுந்தாள் வேங்கை'என்ற பல பெயர்களுண்டு.

அந்த வேங்கை மரத்திலே பூக்கும் எனக்குத்தான் வேங்கைப் பூ' என்ற பெயர்.

நான் மஞ்சள் வண்ணமாக இருப்பேன். கொத்துக் கொத்தாக மலர்வேன்.

அழகிலே சிறந்த பூ வேங்கைப் பூ. காணக் காணக் கவர்ச்சி மிக்கப் பக.

வேங்கைப் பூவின் தாது; பொன் பொடியன்ன மின்னும்.

பூ, பூக்கத் தொடங்கும்போது, பெரும்பாலான அரும்புகள் ஒருங்கே மலரும்.

'அரும் பல மலர்ந்த கருங்கால் வேங்கை’ என்று; அதன் மலர்ச்சியை ஒரு புலவர் பாடினார்.

வேங்கைப் பூ மஞ்சள் நிறம்தான் என்று நான் கூறினால் - நீ நம்புவாயா?

அதற்கும் சில இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன தம்பி.

"பொன்னினர் வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து’’ என்று நற்றினை'யில் வரும் 28ம் பாடல் நவில்கிறது.

"பொன்னினர் வேங்கைப் பூஞ்சிலைச் செலி இயர்" என்று, அதே இலக்கியத்தின் 151ம் பாடலில் காணப்படுகிறது.

"பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவி" என்று 'ஐங்குறுநூறு அறைகிறது.

"கருங்கால் வேங்கை மலரின் நாளும் பொன்னென விசுமந்து" என்று புறநானூறு புகல்கிறது.