62
அறிவியல் தமிழ்
கூடாதொழியாதிறே'[1] என்ற தத்துவத்திரயக் கூற்றினையும் காண்க. இக்கருத்தினையே திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் அழகாகக் கவி அமைத்துக் காட்டுவர்.[2]
சரீர-சரீர பாவனை: சித்தும் அசித்தும் ஈசுவரனின் உடலாக அமைந்துள்ளன என்பது வைணவ சமயக் கொள்கை.[3] இஃது உடல் உயிர்த்தொடர்பு (சரீர-சரீரி பாவனை) என்று வழங்கப்பெறும். இக்கருத்து,
“வானின்று இழிந்து வரம்புஇகந்த
மாபூ தத்தின் வைப்புளங்கும்
ஊனும் உயிரும் உணர்வும்போல்
என்ற பாடற் பகுதியில் அமைந்திருப்பதைக் காண்க. இங்கு ‘வான்’ என்பது மூலப்பிரகிருதி (அசித்து). மூலப் பகுதியிலிருந்து தோன்றிய ஐந்து பூதங்களின் விகாரமே இந்த அகிலம்.
“வானும் நிலனும் முதலீறில்
என்று பூதங்களின் வரம்பின்மையைப் பின்னும் விளக்குவன். இங்கு உணர்வு என்பது, தர்மபூத ஞானம். பிரகிருதியின் உள்ளே இருப்பதற்கு ஊனுக்குள் உயிர் இருப்பது உவமை; அங்ஙனமே அவன் அதன் வெளியில் இருப்பதற்கு உயிரில்
———————