66 அறிவியல் தமிழ்
சென்றா சறுங்காலத்(து) அந்நிலைய தாகித்
திறத்துலகம் தானாகிச் செஞ்செவே நின்ற நன்றாய ஞானத் தனிக்கொழுந்தே'
[ஆசறுதல்-முடிதல்)
என்று கூறுவன். இங்கு 'ஒன்றாகி........ஞானக் கொழுந்தே" என்றது,
'கரந்தசில் இடந்தோறும்
இடந்திகழ் பொருள்தொறும் கரந்து எங்கும் பரந்துளன்,
இவைஉண்ட கரனே."
என்ற ஆழ்வார் பாசுரப் பகுதியை நினைவிற் கொண்டு என்க. மேலும் இந்திரன் வாய்மொழியாகவே இறைவனின் அந்தர்யாமித்துவத்தை,
"தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்றசுடரே!”*
என்று வற்புறுத்துவன்.
முததொழில்களையுடையவன். ஈசுவரன் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் தனது சங்கல்பத்தாலேயே வருத்தமின்றி நிறைவேற்றுவான்' இதனைக் கம்பநாடன்,
'உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
53. ஆரணி. சரயங்கன் பிறப்புநீங்கு-30 54. திருவாய் 1.1:10 55. ஆரணிய, சரபங்கன் பிறப்பு-27 56. தத்துவத் திரயம்-சசுவரப் பிரகாணம்-சூத் 21-25.