பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அறிவியல் திருவள்ளுவம்


"சலத்தால் (வஞ்சத்தால்) பொருள் செய்து
            ஏமார்த்தல் (பாதுகாத்தல்) பசுமட்
கலத்துள் நீர்பெய்து இரீதியற்று"
(660)

என்றார்.

எனவே, திருவள்ளுவர் குறித்த 'செல்வத்தால் பாதுகாப்பு' (இருவகையிலும்) இக்கால உலக அரசுகளால் கண்காணும் காட்சியாக வெளிப்படுகின்றது. இது பொருளிய அறிவியலின் குறியாகும்.

(2) அடக்க ஏமம்

செல்வம் பாதுகாப்புத் தருவது. அது போன்று அது பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும். செல்வத்தைப் பேணிப் பாதுகாப்பது போன்று வேறு பலவும் பாதுகாக்கப்படவேண்டும் என்பார் திருவள்ளுவர். அவற்றுள் 'அடக்கம்' ஒன்று,

"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
            (ஏனெனில்)
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு"(122)


இக்குறளில் உயிர்க்கு ஒப்பில்லாத செல்வம் 'அடக்கம்' என்றார். எனவே, செல்வம் போன்று அடக்கமும் ஓர் ஏமம் ஆகிறது.

'அடக்கம்' ஏமம் ஆவதைத் திருவள்ளுவர் ஓர் உவமையுடன்,

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

(126)