பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அறிவுக்


ஷேக்ஸ்பியர்

181.சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும்.

ஷேக்ஸ்பியர்

182.அறம் விரும்பு; அதுவே வீடு.

மில்டன்

183.மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம்.

பேக்கன்

184.நான் சுவர்க்கத்தில் இருக்கவேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும்.

ஸ்டான்போர்டு

185.ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை.

ஆனால், அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான்.

வான் டைக்

186.சுவர்க்கத்துக்கு வெகு தூரத்தில் உள்ளது பூமி. பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம்.

ஹேர்