பக்கம்:அறுவகை இலக்கணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

vii ஐகாரத்தை எழுதும் முறையற்றியும், ஓவிக்கும் முறை பற்றியும் அவர் விளக்கியிருப்பது நுட்பமாகப் பாராட்டத் தக்கதாகும். 'ஊகாரத்து இரண்டாம் எழுத்துஎனத் துங்கள் வளத்தில் நீட்டாது வளைத்துஇடன் கொணர்ந்து கீழுற இருதரம் மேல்நோக்கி ஐகாரம்; துவீதா அடிப்பல் உட்புறத்து ஒன்றத் துருத்தியில் உயர்த்துகீழ் அடங்கி ஓலிக்கும் என்பது உணர்த்தோர் இயல்பே-1:11 இவ்வாறே பிற இலக்கண நூல்களில் காணப்படாத நுண்ணிய செய்திகளையும் ஒவ்வோர் இயலிலும் விளக்கியிருப்பது நினைத்து நினைத்து மகிழ்தற்குரியதாம். -சுவாமிகளின் தமிழ்ப்பற்றுக்கு அளவில்லை. தமிழறியாத் தெய்வம் ஒன்று இருந்தால் அது பேயைவிடத் தாழ்ந்தது என்று துணிந்து கூறுகிறார். தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதுஎனில் அல்துஉணர் அலகையில் தாழ்வுளனல் அறமே - 6:30 இந்நூற்பாவுக்கு இவ்வுரையாசிரியர் தரும் விளக்கம் ஒன்றே அவர்தம் புலமையை வியப்பதற்குப் போதுமானதாகும். தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் இவது என்பதே உண்மை; அதனால்தான் உளது எனில் என்றார். நூற்பாவில் தமிழறிவற்ற வேந்தளைத் தாழ்த்திக்கூறிய இவர் இதில் தெய்வத்திற்கே தமிழுணர்ச்சி இல்லாதிருக்குமானால் அது பேயைவிட இழித்ததே எனக் கூறுகிறார். இந் நூலாசிரியரின் தாய்மொழிப்பற்று இவற்றால் குன்றி லிட்ட விளக்காய் வெளிப்படுகிறது. 'தமிழ்மொழி, தன்னை நன்கு கற்றால் மனிதர்களையே தேவர்களின் தேவராகச் செய்துவிடும் என்பார் இவர்